400மேருமந்தர புராணம்  


 

என்ன     -   என்று   கேட்க, பவித்திரமுனியும்   - பரிசுத்தனான
அப்பிரீதிங்கர    முனிவனும்,   பைம்பொன்   - பசுமை பொருந்திய
பொன்னாபரணங்களையணிந்த,   கணிகை   பால் - தாசியினிடத்தில்,
பட்ட வெல்லாம் - உண்டானவைகளை யெல்லாம், (அதாவது : அவள்
தர்மங்கேட்டது    விரதங்கொண்டது    முதலியவைகளே யெல்லாம்),
விரித்துரைப்ப - விளக்கிச் சொல்ல, கேட்டு - அதைக்கேட்டு, உடன் -
அப்பொழுதே,  வியந்து   - விசித்திர மதி (முனிவன்) ஆச்சரியமுற்று,
வெய்துயிர்த்து   -  பெருமூச்சு விட்டு, வேட்கை - காமவிருப்பமானது,
உருத்தெழ - தனக்குள் உருவமுற்று அதிகமாக உண்டாக, இருக்கை -
அப்பட்டணத்தில்  அவளிருக்கும் இடத்தையும், நாமம் - பெயரையும்,
உருவமும்  - ரூபத்தையும், தெரிய - விளங்கும்படியாக, கேட்டான் -
அவனிடம் வினவினான், எ-று.                             (42)

855. வினையின தெழுச்சி தன்னால் வேதனை வசத்த னாகி
     முனியவன் றனிய னாகிப் பாரணைக் கென்று போனான்
     றனதிடங் குறுகக் கண்ட தையலா ளுவந்து சால
     விநயத்தி னிறைஞ்சிக் கேட்டாள் விரதத்தின் பலனை யன்றே.

     (இ-ள்.)   வினையினது  -  கருமத்தினது, எழுச்சி தன்னால் -
உதயத்தினாலே,  (மேற் கூறியபடி),  வேதனை  - காம வேதனையின்,
வசத்தனாகி    -   வசமானவனாகி, முனியவன்   -  அவ்விசித்ரமதி
முனிவனானவன், தனியனாகி - தனியானவனாய், பாரணைக்கென்று -
ஆஹாரங்கொள்ளப்   போக வேண்டுமென்று, போனான் - (மறுநாள்
சரியா    மார்க்கமாக    மாயாச்சாரமாய்ப்)   போனான், (அவ்வாறு
சென்றவன்),   தனதிடம்   - தன்னுடைய வீட்டை, குறுக - அடைய,
கண்ட    - பார்த்த, தையலாள்  - அந்தப் புத்தி ஷேனையென்னும்
கணிகையானவள்,   உவந்து   -    ஸந்தோஷித்து, சால - மிகவும்,
விநயத்தின்    -   மரியாதையாக, இறைஞ்சி    - வணக்கஞ்செய்து,
விரதத்தின்    -  முன்னாள்தான் கொண்ட விரதத்தினது, பலனை -
பிரதிபலனாகுந்     தன்மையை,     கேட்டாள்     - (அவனிடம்)
வினாவுதலுற்றாள், எ-று.                                 (43)

856. மோகரா கத்த வாய கதைகளை முனிவன் சொல்லப்
     போகரா கத்த வார்த்தைப் புதியனோ முனிவ னென்று
     நாகரா கத்திற் கெட்டார் கதைகளை நவிற்றப் பின்னும்
     வேகரா கத்த னாக மெல்லியல் வெறுப்பச் சொன்னாள்.

     (இ-ள்.)   (அவள்    அவ்வாறு   வினவியதற்கு), முனிவன் -
விசித்திரமதி    முனிவன்,  மோகராகத்தவாய - மோகவாஞ்சையாகிய,
கதைகளை    -   சரிதங்களை, சொல்ல - வசனிக்க, (புத்திஷேனை),
போகராகத்த  - காமபோக வாஞ்சையாகிய, வார்த்தை - வசனத்தைப்
பேசுகின்ற,    முனிவன்   -    இம்முனிவன், புதியனோ   - நேற்று
வந்தவனன்றிப்   புதியவனோ?, என்று - என்று நினைத்து, (அவனை
உற்று