வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம் 401


 

நோக்கிப்   புதியவனென்றறிந்து),  நாகராகத்தில்  -  நாகர்களுக்குரிய
பெரிதாகிய  மோக வாஞ்சையினால், கெட்டார் - கெடுதியுற்றவர்களின்,
கதைகளை    -     சரிதங்களை,   கலிற்ற   - சொல்ல, பின்னும் -
அதன்மேலும்,    (அவன்    உபசமமடையாமல்), வேகராகத்தனாக -
தீவிரமாகிய    காமவாஞ்சையை    அவள்   பேரில் உடையவனாக,
மெல்லியள்    -  மிருதுவான சரீரத்தையுடைய அக்கணிகையானவள்,
வெறுப்ப    - வைராக்கியமடையும் படியாக, சொன்னாள் - அடியில்
வருமாறு சொல்லினாள், எ-று.                             (44)

857. எலும்புதேர் லீருள் வெண்ணஞ் சூன்குடர் மலங்கண் மூளை
    கலந்தநெய்த் தோர் நரம்பு வழுப்பிவை வேறு கண்டால்
    விலங்கிமேற் சேர லின்றி வெறுத்துமிழ்ந் துவர்த்துப் போவார்
    கலந்திவை கிடந்த குப்பை கண்டுகா முறுவ தென்னோ.

     (இ-ள்.)  (அவள்,  சரீரத்தில்),  எலும்பு - அஸ்தியும், தோல் -
சருமமும்,  ஈருள் - ஈரலும், வெண் - வெளுப்பாகிய, நஞ்சு - நஞ்சுக்
கொடிகளும்,   ஊன்   - மாம்ஸமும், குடர்   - குடலும், மலங்கள் -
(நவத்துவாரங்களாலும் சரீரத்தாலும் விளையும்) அசுசிசமூகமும், மூளை
- மூளையும்,   கலந்த   - சரீரப்பிரதேசம் முழுதிலும் சேர்ந்திராநின்ற,
நெய்த்தோர்    -    இரத்தமும், நரம்பு    - நரம்புகளும், வழுப்பு -
கொழுப்பும்,  (ஆகிய), இவை - இவைகளை, வேறு கண்டால் - வேறு
வேறாகப்  பிரித்துப் பார்த்தால், (அறிவுடையார்), மேல் - இவைகளின்
மேலே,   சேரலின்றி - சேராமல், விலங்கி - (வெகு தூரத்தில்) விலகி,
வெறுத்து   - விராகமடைந்து,  உமிழ்ந்து - காறியுமிழ்ந்து, உவர்த்து -
அருவருத்து,  போவார்   - போவார்கள், இவை - இவைகளெல்லாம்,
கலந்து  - கூடி, கிடந்த   -  கிடந்ததாகிய (சரீரமென்னும்), குப்பை -
கும்பலை, கண்டு - பார்த்து, காமுறுவது - ஆசைப்படுவது, என்னோ -
என்ன ஆச்சரியம்!, எ-று.                                  (45)

858. உணர்வொடு வார்த்தை பார்த்த லுவத்தலு முனிவுங் காமத்
    துணையிவை தொடர்ந்து நின்றால் தூயவே யாகு மன்றிப்
    பிணமிது பிணத்தைச் சேர்ந்தால் பிழைத்ததென் பெரிய வின்ப
    மணையுமே லென்னச் சாலச் சுளிந்தவள் வெறுத்துப் போனாள்.

     (இ-ள்.)   (மேலும்),  உணர்வொடு   - (அறிவினால் செய்கின்ற
மனோ   எண்ணத்தில்    ஸ்த்ரீ  புமான்கள்  உண்டு பண்ணும் காம)
நினைப்பினோடு,   வார்த்தை   -  ஒருவரோடொருவர் சம்பாஷிக்கும்
வார்த்தையும்,   பார்த்தல்    -    ஒத்து  நோக்குதலும், உவத்தலும்,
சந்தோஷித்தலும்,   முனிவும் -   புலவியென்னும்  காமக்கோபமாகிய
ஊடலும்,   (ஆகிய  இவ்வைந்தும்),  காமத்துணை - காமசௌக்கியம்
பெறச்   சகாயமாகும்,   இவை - இவைகளை, தொடர்ந்து நின்றால் -
இருவரும்   சேர்ந்து    நின்றால்,   (இவைகள்    மனமொத்த ஸ்த்ரீ
புருஷர்கட்கு), தூயவேயாகும் - களங்க