முதலியவற்றால், (வாசனையேற்றி அலங்கரித்து), வேய்ந்த -
முடிக்கப்பெற்ற, கூந்தல் - அளகத்தையுடைய, தலையினின்று -
தலையினின்றும்,இழிந்த காலை - நீங்கின காலத்தில், தான் - அதனை
முன்னே உயர்வாக நினைத்துச் சூட்டியவள் தான், துறந்திட்டதேபோல்
- மறுபடி கொள்ளாமல் அதனை நீக்கிவிடுவதுபோல, (விசித்ரமதியின்)
மலையன - பர்வதம்போல் பெரிதாகிய குணமுடைய, தவத்து வேடம் -
தவ உருவத்தை, கண்டு - பார்த்து, முன் - முன்னே, வணங்கி -
நமஸ்கரித்து, மாண்ட - பெரிதாகிய, நிலையினின்று - தபோ
நிலையினின்றும், இழிய - (அவன்) நழுவ, பின்னை - பிறகு, நேரிழை
- நேர்மையான ஆபரணங்களை யணிந்த புத்தி ஷேணையானவள்,
இகழ்ந்திட்டாள் - இம்முனியை இகழ்ச்சி பண்ணினாள், எ-று. (52)
865. புகழ்வரம் பாய புத்தி சேனையாந் தோகை தன்னை
யிகழ்வங் கெழுந்த கோபத் திசைந்தசோ கத்தோ டேகித்
தகைநெடுங் குழலி னாளைச் சாரலா முபாயந் தேடி
யகநக ரெங்கும் புக்கா னாவதொன்றிலாமைக் காணா.
(இ-ள்.) (அதன்மேல் அவ்விசித்ரமதி முனிவன்), புகழ் -
கீர்த்திக்கு, வரம்பாய - அணையாகிய (அதாவது : புகழ்கெடாமல்
அணையாய் நின்று அதனை வளர்க்கக் கூடிய), புத்திசேனையாம் -
புத்திஷேணையாகிய, தோகை - ஆண்மயில் போன்ற சாயலையுடைய
கணிகையானவள், தன்னை - தன்னை, இகழ - இகழ்ச்சி செய்ய,
அங்கெழுந்த - அதனால் அம்முனிக்கப்போது உதித்த, கோபத்து -
குரோத பரிணாமத்தில், இசைந்த - பொருந்திய, சோகத்தோடு - மன
வருத்தத்தோடு, ஏகி - போகி, தகை - அழகையுடைத்தாகிய, நெடும் -
நீண்ட, குழலினாளை - அளகத்தையுடைய அம்மாதை, சாரல் -
சேருதற்கு, ஆம் - ஆகின்ற, உபாயம் - தந்திரங்களை, தேடி -
ஆராய்ந்து, அகநகர் - உள் நகரிலே, எங்கும் - எவ்விடங்களிலேயும்,
புக்கான் - புகுந்து பார்த்தவனாகி, (பலரை விசாரித்தும்), ஆவது ஒன்று
- ஆகும்படியான தன்மை யாதொன்றும், இலாமை - இல்லாமையை,
காணா - கண்டு, எ-று.
இதுவும், அடுத்த செய்யுளும் குளகம். (53)
866. கடையனப் புரத்து வேந்தன் கந்தமித் திரனென் பானா
முடல்சுவைத் துண்டு செல்வா னுவப்பதோர் படியி னூனை
மடையனாய்ச் சமைத்துக் காட்டி மற்றந்த மன்ன னாலத்
துடியிடை புத்தி சேனை தன்னகந் துன்னினானே.
(இ-ள்.) கடையன் - தர்மாதர்மம் இத்தன்மை யென்றறியாது
தாழ்ந்த நிலையனும், (அதாவது : ஹேயோபாதேய வியவஹார
நிச்சயமில்லாதவனும்), உடல் சுவைத்துண்டு செல்வான் - பிற
ஜீவன்களின் உடல்களை (அதாவது : |