(இ-ள்.) (அவன்), பங்கப்பிரபையில் - பங்கப்பிரபை யென்கிற
நாலாநரகத்தில், பருமித்த - உத்கிருஷ்டமாகிய, கடல்கள் பத்தும் -
பத்துக் கடல் காலங்களை, பெற்று - தனக்கு ஆயுஷ்யமாகவடைந்து,
நரகத்தின் - அந்த நாலாநரகத்தினின்றும், அரிதில் - அருமையாக
(அதாவது : நீங்கும் விஷயத்தில் வெகு பிரயாசையின்பேரில்
ஆயுரவஸானத்து), போந்து - அந்நரகாயுஷ்யம் நீங்கி வந்து,
நால்வகையாழிகாலம் - நாலுவகையான கடற்காலம், திரததாவரத்தில் -
த்ரஸ ஸ்தாவரங்களில், சென்று - அடைந்து சுழன்று, தீயவாம் -
கொடியனவாகிய, துயரம் - துன்பங்களை, உற்று - அடைந்து,
பரதத்தில் - பரதக்ஷேத்திரத்தில், கச்சையென்னும் - கச்சையென்கின்ற
(பெயருள்ள), புரத்தின்பால் - பட்டணத்தின் பக்கத்துள்ள குறிச்சியுள்,
வேடனானான் - வேடனாகப் பிறந்தான், எ-று.
‘பத்தும்" என்பதில், உம்மை - அசை நிறைப்பொருளது. (66)
879. தாருண கிரண னென்னும் வேடன்றன் மனைவி தாழ்ந்த
வாரிணை யனைய கொங்கை மங்கிதன் சிறுவன் மிக்க
தாருண னாகித் தோன்றித் தலையிலாத் தால துண்டங்
கூரெரி கவர்ந்த தொப்பான் கொடுமையாற் கனலி யொப்பான்.
(இ-ள்.) (அவ்வாறு வேடனாகப் பிறந்த அவன்),
தாருணகிரணனென்னும் - தாருணகிரணனென்னும் பெயரையுடைய,
வேடன் தன் - வேடனுடைய, மனைவி - பெண்சாதியும், தாழ்ந்த -
தொங்கப்பட்ட, வார் இணையனைய - இரண்டு தோல் துண்டுகளுக்கு
ஒப்பாகிய, கொங்கை - ஸ்தனங்களையுடையவளும், (ஆகிய), மங்கிதன்
- மங்கி யென்பவளுடைய, சிறுவன் - புத்திரனான, மிக்க தாருணனாகி
- அதிதாருணனென்னும் பெயருடையவனாகி, தோன்றி - விளங்கி,
(அதாவது : அவ்வேடனுக்கும் அவன் மனைவிக்கும் புத்திரனாகி
விளங்கி), தலையிலா - மட்டை முதலியவற்றையுடைய மேற்பாகம்
இல்லாத, கூர் எரிகவர்ந்தது - மிகுந்த நெருப்புபற்றிக் கரிந்ததாகிய,
தாலதுண்டம் - பனங்கட்டையை, ஒப்பான் - நிகர்த்தவனாய்
விளங்கினான், (அதாவது : அந்தக் கரிந்த பனங்கட்டையைப்போன்ற
கரிய நிறமுடையவனாய் விளங்கினான், அவன்), கொடுமையால் -
பொல்லாங்குத் தொழிலினால், கனலியொப்பான் - அக்னிக்குச்
சமானமாவான், எ-று. (67)
880. பாவந்தா னுருவங் கொண்டெவ் வுயிரையும் படுக்க வேண்டிச்
சாபஞ்செஞ் சரங்க ளேந்தித் திரிகின்ற தனையான் வந்து
கோபந்தா னாதி யுள்ளான் கொலையிலா னந்தத் தோடும்
வேபந்தா னுயிர்கட் காக்கி விலங்கன்மே லேறி னானே.
(இ-ள்.) (அவ்வாறு பிறந்து வளர்ந்திருக்கும்போது),பாவந்தான் -
பாபமே, உருவங்கொண்டு - ஒரு மனித ரூபத்தைக்கொண்டு,
எவ்வுயிரையும் - எல்லாப் |