கிஷண்டத்வீபமானது, ஓதிய - சொல்லப்பட்ட, நான்குனூறாயிரம்
புகைகள் - நாலு லட்சம் யோஜனைகள், உள்ளகன்று - உள்ளே
விஸ்தீர்ணமுடையதாகி, வேதிகை யிரண்டின் - (தன்னை உட்புறமும்,
வெளிப்புறமும், சூழ்ந்த மஹாலவண, காளோதக, சமுத்திரங்களினுடைய
வஜ்ரவேதிகைகள் இரண்டினால்), சக்கவாளத்தின் - சக்ரவாள
கிரியைப்போல வட்டமாய்ச் (சூழ்ந்ததாகி), நின்று - நிலைபெற்று,
விளங்கும் - விளங்கிக் கொண்டிருக்கும், எ-று.
ஏ - அசை. (2)
893. மந்தர மிரண்டு மாண்ட குலமலை பன்னி ரண்டி
னந்தரத் தாறு நாலே ழாமத னகத்துக் கீழ்பான்
மந்தர மதற்கு மேல்பாற் சீதுதை வடக ரைக்கட்
கந்திலை யென்னு நாடு காமுறுந் தகைய துண்டே.
(இ-ள்.) (அந்தத் தாதகிஷண்ட த்வீபத்திலே), மந்தரம் -
மந்தரபர்வதங்கள், இரண்டு - கீழ்பாகத்தில் ஒன்று மேல் பாகத்தில்
ஒன்றுமாக இரண்டாகும், மாண்ட - மாட்சிமைப்பட்ட, குலமலை - குல
பர்வதங்கள், பன்னிரண்டின் - ஒரு ஒரு பக்கத்துக்கு ஆறு ஆறு ஆக
அமைந்த பன்னிரண்டின், அந்தரத்து - அந்தரங்களிலே, (அத்தீபத்தில்
செல்லா நின்ற), ஆறு - (கங்கா, சிந்து, முதலாகிய) மஹா நதிகள்,
நாலேழாம் - ஒரு பக்கத்துக்குப் பதினாலாக இரண்டு பக்கமுஞ்
சேர்ந்து இருபத்தெட்டாகும், அதனகத்து - அப்படிப்பட்ட
அத்தீபத்தினுடைய மத்தியில், கீழ்பால் - கிழக்குப் பக்கத்திலுள்ள,
மந்தரமதற்கு - மந்தர பர்வதத்திற்கு, மேல் பால் - அபர பாகத்தில்,
(உள்ள), சீதுதை - சீதோதா நதியினுடைய, வட கரைக்கண் - வட
கரையிலே, கந்திலையென்னும் - கந்திலா வென்கிற, நாடு -
தேசமானது - காமுறும் - யாவர்களும் விரும்பும்படியான, தகையது -
குணமுடையதாகி, உண்டு - உள்ளது, எ-று. (3)
894. விலங்கல்வீ ழருவி வேழ மும்மதந் தேறல் வேரி
கலந்துடன் செல்லு மாறு கயந்தலைப் பட்ட காலைச்
சலஞ்சலம் பிரிந்த காத லார்தமைக் கண்ட போழ்தி
லலங்கலங் குழவி னார்போ லமர்ந்தினி தொழுகு
நாட்டுள்.
(இ-ள்.) விலங்கல் - பர்வதத்தினின்றும், வீழ் - சொரிகின்ற,
அருவி - அருவிஜலமும், வேழ மும்மதம் - யானைகளது (கர்ண,
கபோல, பீஜமென்கிற ஸ்தானங்களினின்றொழுகும்) மூன்றுவித
மதங்களும், தேறல் - தேன் துளிகளும், வேரி - மற்ற வாசனைகளும்,
கலந்து - கூடி, செல்லும் - செல்கின்ற, ஆறு - நதியானது, கயம் -
(நீரறாத) மடுக்களிலும் அகழியிலும் குளங்களிலும், தலைப்பட்ட காலை
- வரத்துக் கால்களால் வந்து சேர்ந்த காலத்திலே, சலஞ்சலம் -
(அவைகளி |