மத்தோடு கூடி), பணிய - (அவர்களை), வணங்கவும்,
விஞ்சைத்தடவரை யரசர் - விஜயார்த்த பர்வத வாசிகளாகிய
வித்தியாதர வரசர்கள், ஜம்பத்தஞ்சினுக்கிரட்டி - நூற்றொருபது
பேர்கள், தாழ - வணங்கவும், படரொளிபரப்ப - மிகுதியான ஜோதி
விசாலிக்க, விண்ணோர் - கணபத்த தேவாதிபர்கள், எண்ணாயிரவர் -
எட்டாயிரம் பேர்களும், பணிந்தார் - வணங்கினார்கள், எ-று. (33)
924. யானையின் றொகுதி நாற்பத் திரண்டுநூ றாயிரந்தேர்
மானமற் றதுவே வாசி யொன்பதின் கோடி காலாட்
டானுநாற் பத்தி ரண்டு கோடிதா னவர்க டேவர்
தானமா னங்க ளெண்ணா யிரமறு படையி தாமே.
(இ-ள்.) (அப்போது அந்த இராமகேசவர்கட்கு
அமைந்திருந்தவை) யானையின் - யானைகளின், தொகுதி -
கணக்கானது, நாற்பத்திரண்டு நூறாயிரம் - நாற்பத்திரண்டு லக்ஷங்கள்
ஆகும், தேர் - ரதங்களுடைய, மானம் - அளவானது, அதுவே -
முன் சொன்ன யானைகளின் கணக்காகிய நாற்பத்திரண்டு
லக்ஷங்களாகிய அதுவேயாகும்,வாசி - குதிரைகள், ஒன்பதின் கோடி -
ஒன்பது கோடிகளாகும், காலாள் தானும் - காலாள்களானவர்கள்,
நாற்பத்திரண்டு கோடி - நாற்பத்திரண்டு கோடிகளாவர், தானவர்கள் -
வித்தியாதரர்களும், தேவர் - கணபத்த தேவர்களும், (ஆகிய), தானம்
- இவ்விரு ஸ்தானங்களின், மானங்கள் - தனித்தனிப் பிராமணங்கள்,
எண்ணாயிரம் - ஒவ்வொரு வகையிலும் எண்ணாயிரம் பெயர்களாவர்,
அறுபடையிதாமே - இவ்வாறு சொல்லிய இந்தக் கூட்டம் ஷடங்க பல
சேனைகளாம், எ-று.
மற்று - அசை. (34)
925. ஆழிவேல் தண்டு சங்க மருமணி வில்லு வைவா
ளேழுமா லிரத னங்க ளேழாயிர மமரர் காப்ப
மாழைமே கலையின் மாதே வியரெண்ணா யிரத்தி ரட்டி
வேழமேற் றிறைகொண் டெய்தும் நாடுமே லுரைத்த தாமே.
(இ-ள்.) (இவ்வகைப் படைகளையுடைய இவர்களுள்
கேசவனாகிய விபீஷண வாஸுதேவனுக்கு), ஆழி - சக்கராயுதமும்,
வேல் - வேலாயுதமும், தண்டு - தண்டாயுதமும், சங்கம் - வெற்றிச்
சங்கும், அரும் - பெறுதற்கரிதாகிய, மணி - ஜெயகண்டாமணியும்,
வில்லு - காண்டீபமும், வை - கூர்மை பொருந்திய, வாள் -
வாளாயுதமுமென்னும், ஏழு - ஏழும், மால் - பெரிதாகிய, இரதனங்கள்
- இரத்தினங்களாம்,(இவற்றுள் ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் பேர்களாக)
ஏழயிரமமரர் - ஏழாயிரம் வியந்தர தேவர்கள், காப்ப - (இவற்றைக்)
காவல் செய்ய, மாழை - ஸ்வர்ணத்தினால் செய்த, மேகலையின் -
மேகலாபரணத்தை யணிந்திரா |