கடலும், ஏழு - (மூன்றா நரகத்துக் கீழ்ப்புரையில்) ஏழுகடலும், பத்து
(நாலா நரகத்துக் கீழ்ப்புரையில்) பத்துக்கடலும், ஒருபத்தேழு - (ஐந்தா
நரகத்துக்கீழ்ப்புரையில்) பதினேழுகடலும், இருபத்தீரின் - (ஆறா
நரகத்தின் கீழ்ப்புரையிலிராநின்ற நாரகர்களுக்கு) இருபத்திரண்டு
கடலும், மூன்றோடு முப்பான் - (ஏழாநரகத்தில்) முப்பத்து மூன்று
கடலும், நின்ற - நிலைபெற்றிராநின்றன, எ-று.
‘இருபத்தீரின்" என்பதில், இன் - சாரியை. (8)
வேறு.
938. முதலா நரகத் தின்முதற் புரையிற்
பதினா யிரமாண் டுகளாஞ் சிறுமை
விதியான் மிகையா யுகமே லனகீழ்
பதியார் பரமா யுகமல் லனவாம்.
(இ-ள்.) முதலா நரகத்தின் - முதல் நரகத்து, முதற்புரையில் -
முதல் புரையிலிராநின்ற நாரகர்களுக்கு, சிறுமை -
ஜகன்யாயுஷ்யமானது, பதினாயிரம் ஆண்டுகளாம் - பதினாயிரம்
வருஷங்களாகும், விதியால் - கிரமத்தினால், மேலன - மேல்
புரையிலுள்ளவர்களின், மிகையாயுகம் - உத்திருஷ்டாயுஷ்யமானது, கீழ்
பதியார் - கீழ் புரையிலுள்ளவர்களுக்கு, பாமாயுகமல்லன -
உத்கிருஷ்டாயுமல்லாத ஜகன்யாயுஷ்யமாக, ஆம் - ஆகும், எ-று.
உத்கிருஷ்டாயுஷ்யம் வரிசைக் கிரமமாய், முதல் புரையில்
தொண்ணூறாயிரம் வருஷங்களாகும், இரண்டாம்புரையில் தொண்ணூறு
லக்ஷம் வருஷங்களாகும்; மூன்றாம் புரையில் அஸங்கியாத பூர்வகோடி
வருஷங்களாகும்; நாலாவது புரையில் ஒரு கடலில்
பத்திலொருபாகமாகும்; ஐந்தாம் புரையில் ஒரு கடலின் பத்துப்
பங்கில் இரண்டு பங்காகும்;ஆறாம்புரையில் பத்தில் மூன்று பங்காகும்;
ஏழாம்புரையில் பத்தில் நான்கு பங்காகும்; எட்டாம் புரையில் ஒரு
கடலில் பத்தில் ஐந்து பங்காகும்; ஒன்பதாம் புரையில் ஒரு கடலில்
பத்தில் ஆறு பங்கு ஆகும்; பத்தாவது புரையில் ஒரு கடலில் பத்தில்
ஏழுபங்காகும்;பதினொன்றாவது புரையில் ஒரு கடலில் பத்தில் எட்டுப்
பங்காகும்; பன்னிரண்டாவது புரையில், ஒரு கடலில் பத்தில் ஒன்பது
பங்காகும்; பதின்மூன்றாவது புரையில் ஒரு கடல் சரியாய் ஆகும். (9)
939. முழமூன் றுயர்வா முதலாம் புரையின்
முழமூன் றுவில்லேழ் விரலா றுளகீ
ழெழுவா யிதைஞ்ஞூ றுவில்லெய் தளவும்
வழுவா திறுதொ றுமிரட் டியதாம். |