மானது, கெடும் வண்ணம் - நீங்கும் விதமாக, அறப்பொருள் - தர்ம
வசனமாகின்ற தத்துவார்த்தங்களை, உரைப்பன் - சொல்லுவேன்,
எ-று. (31)
961. முனைத்துன்மிசை வந்தவர்கண் மேன்முனித லின்றி
நினைத்திடிது முன்னையென் வினைப்பயன தென்றே
மனத்தின்மற மேவின்மிகு பாவம்வரும் வந்தா
லுனைப்பினை விலங்கினிடை யுய்த்திடரை யாக்கும்.
(இ-ள்.) உன் மிசை - உன் மேல், முனைத்து - கோபித்து,
வந்தவர்கள் மேல் - சண்டைக்கு வந்த நாரகர்களின் மேல்,
முனிதலின்றி - நீ கோபத்தைச் செய்தலின்றி, இது - இத்தன்மையானது,
முன்னை - பூர்வத்தில், என் - என்னாற் செய்யப்பட்ட,
வினைப்பயனதென்று - கர்மோதய விளைவென்று, நினைத்திடு -
தியானிப்பாயாக, (அப்படியல்லாமல்), மனத்தின் - உன்னுடைய
மனதில், மறமேவின் - பாபகாரணங்களாகிய குரோதாதிகளை
யடைவாயானால், (அவ்வந்தரங்க பரிணாமத்தினால்), மிகு -
மிகுதியாகிய, பாவம் - திரவிய பாபகர்ம பிரகிருதிகள், வரும் -
ஆத்மனிடத்தில் ஆஸ்ரவமாகும், வந்தால் - அப்படி ஆஸ்ரவமாகி
ஆத்மப் பிரதேசபந்தமும் ஸ்திதிபந்தமுமானால் (அதனால்), உனை -
உன்னை, (அனுபாக பந்தமாகிய தன்மையாலே), பின்னை - பிறகு,
விலங்கினிடை - திரியக்கதியினிடத்தில், உய்த்து - அடைவித்து,
இடரையாக்கும் - துன்பத்தைச் செய்விக்கும்,
எ-று. (32)
962. அறிவன்முத லைவர்சர ணம்புகுதி யாயிற்
பிறவிமறு சுழியின்வழி யொழுகுதல் பிழைத்தி
கறுவுசெறி வுறுதலொடு வத்துவை யழித்தா
லிறுதியில்பல் தீவினைக ளெய்தியடு நின்றே.
(இ-ள்.)அறிவன் முதல் -அருகத்பரமேஷ்டி முதலாகிய, ஐவர் -
பஞ்ச பரமேஷ்டிகளை, சரணம் - ரக்ஷணையாக, புகுதியாயில் -
சேர்வாயாகில், (அதாவது பஞ்சபரமேஷ்டிகளைத் தியானித்தால்
அதனாலே), பிறவி - ஸம்ஸார சமுத்திரத்தின், மறு - சுழலுகின்ற,
சுழியின் - நீர்ச்சுழலினது, வழி - மார்க்கத்தில், ஒழுகுதல் -
வீழ்கின்றதினின்றும், பிழைத்தி - நீ நீங்கினவனாவாய்,
(அப்படியில்லாமல்), கறுவு - நீங்காத குரோதாதிகளையும்,
செறிவுறுதலொடு - சேர்தலோடு, வத்துவை - ஆத்மத் திரவிய
சுபாவகுணத்தை, அழித்தால் - கெடுத்தால், (அதனால்), இறுதியில் -
முடிவில்லாத, பல் - பலவாகிய, தீவினைகள் - திரவிய பாபங்கள்,
எய்தி - ஆத்மனிடத்தில் அடைந்து , நின்று - பந்தித்து நின்று, அடும்
- துக்க பலனை உதிப்பித்து ஆத்மனை வருந்தப்பண்ணும், எ-று. (33)
963. வீட்டினை விளைக்குநல காட்சியினை விட்டிம்
மோட்டுநர கத்துயர் முழங்கழலின் வீழ்ந்தாய் |