மன்றித்துயர் நீங்குவதற் கார்வமெழு மாகி
லொன்றுமுனை நின்றுவினை யொறுக்குமினி மிக்கே.
(இ-ள்.) இக்கதி - இந்நரககதியானது, என்று - எப்பொழுது,
நீங்குவதென்று - நீங்குவதாகுமென்று, ஏதம் - வருத்தத்தை,
உறவேண்டா - அடையவேண்டாம், நின்ற - பந்தித்து நின்ற, வினை -
கருமங்களின் ஸ்திதிகாலமானது, நீங்கிய கணத்து - முடிவுபெற்ற
நீங்கினகாலத்து, இதுவும் - இக்கதியும், நீங்கும் - நீங்கிவிடும், அன்றி
- அப்படியன்றி, துயர் - துக்கமானது, நீங்குவதற்கு - நீங்கி
விடுவதற்கு, ஆர்வம் - ஆசையானது, எழுமாகில் - உண்டாகுமாகில்,
உனை - உன்னை, ஒன்றும் - பொருந்தியதாகிய, வினை - கருமங்கள்,
இனி - இனிமேலும், மிக்கு - அதிகமாக, நின்று - உதயஞ்செய்து
நின்று, ஒறுக்கும் - வருத்தத்தைச் செய்விக்கும், எ-று. (36)
966. சென்றதுன தாயுகமுஞ் சிறிதுபெரி தொழிய
நின்றபெருந் துயரிதுவு நீங்குஞ்சில நாளில்
வென்றவர்த மறநெறியின் மெய்யுணர்வு காட்சி
யொன்றியொழு குன்கண்வினை யெட்டுமுடன் கெடுக்கும்.
(இ-ள்.) சென்றது - இதற்குமுன் சென்றதாகிய, உனது -
உன்னுடைய, ஆயுகமும், ஆயுஷ்யமும், பெரிதொழிய - அதிகமான
பாகம் நீங்கிவிட, சிறிது நின்ற - இன்னும் சொற்பகால மிருக்கிறது,
சிலநாளில் - அந்தச் சொற்ப காலத்தில், பெருந்துயரிதுவும் -
பெரிதாகிய இந்நரக துன்பமும், நீங்கும் நீங்கிவிடும், மெய்யுணர்வு -
ஸம்மியக்ஞானத்திலும், காட்சி - ஸம்மியக் தரிசனத்திலும், ஒன்றி -
பொருந்தி, வென்றவர்தம் - ஸகல விபாவங்களை ஜயித்திராநின்ற
ஜினேஸ்வரனால் அருளிச் செய்யப்பட்ட, அறநெறியின் - தர்ம
மார்க்கத்தில், ஒழுகு - பாவனை செய்துநடக்கடவாய், (அப்படி
நடப்பாயேயாமாகில் அப்பாவனையானது), உன்கண் - உன்னிடத்து
பந்தமாகி நின்ற, வினையெட்டும் - அஷ்ட கருமங்களையும், உடன் -
உடனே (அதாவது : அற்ப காலத்திலே), கெடுக்கும் - நீக்கிவிடும்,
எ-று. (37)
வேறு.
967. வாளரி யுழுவை வாயின் மதசரி சையி னஞ்சிற்
சூழெரி யகத்திற் போரிற் சுறாவெறி கடலிற் கானி
னீளர ணாகி நிற்கு நிரையத்து விழாமற் காக்குங்
கேளினியறத்தைப் போல கிடைப்பதொன் றில்லை கண்டாய்.
(இ-ள்.) வாளரி - பிரகரசம் பொருந்திய சிம்மத்தினிடத்திலும்,
உழுவை வாயின் - புலியினுடைய வாயிலும், மதகரிகையின் - மதம்
பொருந்திய யானையி |