பிறவிமுடிச்சருக்கம் 457


 

பதினொன்றாவது :

பிறவிமுடிச்சருக்கம்

970. நிறைபொறை சாந்தி யோம்பி நின்றதொன் றின்மை சிந்தித்
    தறிவன சரண மூழ்கி யாருயிர்க் கருளி யந்தப்
    பிறவியி னொருவிச் சித்த விரதம்பெ யிரும்பிற் பெற்ற
    வறநெறி யதனின் வந்திங் கரசிளங் குமர னானான்.

     (இ-ள்.)  (நான்  அவ்வாறு  வந்தபின் அவன்), நிறை - மனோ
நிறைவு   பெற்ற,  பொறை - க்ஷமையும், சாந்தி - உபசம பரிணதியும்,
(ஆகிய    சுபோபயோக  குணங்களை),        ஓம்பி -   ரக்ஷித்து,
நின்றதொன்றின்மை - ஸம்ஸார சுக துக்கங்களில் யாதொன்றும் நிலை
நில்லாத   அனித்திய  ஸ்வரூபத்தை, சிந்தித்து - தியானித்து, அறிவன
சரணம்    - அருகபரனது பாதங்களில், மூழ்கி - படிந்து (அதாவது :
அருகத்பத்தி   பரவசனாகி)     ஆர் - நிறைந்திராநின்ற, உயிர்க்கு -
ஸகலஜீவன்களுக்கும், அருளி - காருண்யத்தைச் செய்து, சித்த விரதம்
- ஸித்தரஸத்தை,   பெய்  - சேர்க்கப்பெற்ற, இரும்பில் - அயமானது
பிரகாசமானதுபோல, பெற்ற - அடையப்பட்ட, அறநெறியதனில் - தர்ம
வழியினாலே, அந்தப் பிறவியின் - அந் நரகஜன்மத்தினின்றும், ஒருவி
- நீங்கி,   இங்கு   வந்து   -  இப்பூமியில் வந்து, அரசிளங்குமரன் -
ராஜபுத்திரனாக, ஆனான் - அவதரித்தான், எ-று.               (1)

971. மற்றிந்தத் தீபத் தின்க ணிரேவதத் தயோத்தி யாளுங்
    கொற்றவன் சிரிவம் மாவின் காதலி சுசிமைக் கொம்பின்
    பெற்றியாள் வயிற்றுச் சீதா மாவெனுஞ் சிறுவ னாகிக்
    கொற்றவர் குலங்க ளென்னுங் குலமலை விளக்கை யொத்தான்.

     (இ-ள்.)  (அங்ஙனம் அவதரித்தவன்), மற்று - பின்னை, இந்தத்
தீபத்தின்   கண்  - இந்த மத்திமலோக ஜம்பூத்வீபத்தில், ரேவதத்து -
ஐராவதக்ஷேத்திரத்தில்,   அயோத்தி - அயோத்தியென்கிற நகரத்தை,
ஆளும்   - ஆள்கின்ற, கொற்றவன் - அரசனாகிய, சிரிவம்மாவின் -
ஸ்ரீவர்மா   வென்பவனுடைய,    காதலி   -    வாஞ்சையையுடைய
பட்டத்தரசியான,    கொம்பின் - புஷ்பக் கொம்பினது, பெற்றியாள் -
தன்மையையுடையவளாகிய, சுசிமை - ஸுஸிமாவென்பவளது, வயிற்று -
கர்ப்பத்திலே   யடைந்து,     சீதாமாவெனும் -   ஸ்ரீதாமாவென்னும்
நாமமுடைய, சிறுவனாகி - புத்திரனாகி, கொற்றவர் - அரசர்களுடைய,
குலங்களென்னும் - குலங்க