யெவ்வழி யானு மோடி யெளியவர் தம்மை யெல்லாங்
கவ்வைகள் பலவுஞ் செய்வர் மேல்வருங் காலத் தென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லிப் பின்னரும்), இவ்வண்ணம் -
இப்பிரகாரம், செய்திடேனேல் - செய்யாமற் போவேனேயாமாகில்,
இருள்பிழம்பு - அந்தகார புஞ்சமானது, இரண்டு மின்னு - இரண்டு
மின்னற்கொடிகளை, கவ்வியதனைய - சேர்ந்ததற்குச் சமானமாகிய,
மேனி - இரண்டு கோர தந்தங்கள் பொருந்திய கறுத்த
சரீரத்தையுடைய, கடையர் - கீழோராகிய இவ்வத்தியாதரர்கள், தம் -
தங்களுடைய, களிப்பினாலே - சந்தோஷத்தினாலே, எவ்வழியானும் -
எந்தத்திக்கிலாகிலும், ஓடி - சென்று, எளியவர் தம்மை யெல்லாம் -
எளிய மனுஷ்யர்களுக்கெல்லாம், மேல்வருங்காலத்து - இனிமேல்
வருங்காலத்தில், கவ்வைகள் பலவும் - பலவாகிய உபசருக்கங்களை,
செய்வர் - செய்வார்கள், என்றான் - என்று சொன்னான், எ-று. (23)
993. மௌவலங் குழலி னாரும் மாவிஞ்சை யடிப்ப டுப்பார்
செவ்வியாஞ் சஞ்ச யந்தன் றிருவடிக் கமலஞ் சேர்ந்தங்
கவ்விய மின்றி நின்று சிறப்பயர்ந் தோதி னல்லா
லெவ்வகை விஞ்சை யேனு மெதிர்வர லொழிக வென்றான்.
(இ-ள்.) (அவ்வாறு சொல்லிப் பின்னர்), மௌவல் - முல்லைப்
புஷ்பங்களை யணிந்த, அம் - அழகிய, குழலினாரும் -
அளகபாரத்தையுடைய ஸ்த்ரீமார்களும், செவ்வியாம் - சுத்த
ஸ்வரூபமுடைய, சஞ்சயந்தன் - சஞ்சயந்த பட்டாரகருடைய,
திருவடிகமலம் - அழகிய பாத தாமரைகளை, சேர்ந்து -
நமஸ்கரித்தடைந்து, அங்கு - அவ்விடத்திலேயே, அவ்வியமின்றி -
வஞ்சனை பொறாமை முதலாகிய துர்க்குணங்களின்றி, நின்று -
சுபத்தியானத்துடன் கூடி நின்று, சிறப்பு - அருகத் பரமேசுவர
பூஜையை, அயர்ந்து - மங்கலார்த்தமாகச் செய்து, ஓதின் - வித்யா
மந்திரங்களை ஓதுவார்களேயானால், மாவிஞ்சை - மஹா வித்தையை,
அடிப்படுப்பார் - தங்கள் வசப்படுத்துவார்கள், அல்லால் -
அப்படியல்லாமல், எவ்வகை விஞ்சையேனும் - எந்த விதமான
வித்தைகளாயிருந்த போழ்திலும், (அவற்றில்), எதிர்வரல் ஒழிக -
அபிமுகமாகாமல் நீங்கக்கடவீராக, என்றான் - என்று (வித்யா
தேவதைகளுக்கு) ஆக்ஞாபித்தான், எ-று.
‘செவ்வியற்சஞ்சயந்தன்" என்றும் பாடபேத முணடு. (24)
994. தரைமக டிலக மன்ன தடவரை யிதன்கண் மேனாட்
பிரமரி முதல விஞ்சை யடிபடப் பிணைய னாருக்
1கிரிமந்தா னிக்கு லத்து மைந்தர்க்கா கென்றி தன்பே
ரிரிமந்த மென்றோர் குன்றி னிறைவனா லயஞ்ச மைத்தான். |