வைசயந்தன் முத்திச்சருக்கம் 47


Meru Mandirapuranam
 

யாகிய,    புண்ணியம்    -   புண்ணியாஸ்வரமென்றும்,   பாவம் -
பாபாஸ்ரவமென்றும், தவியம் - திரவியாஸ்ரவமென்றும்,பாவம்  என்று
- பரிணாமாஸ்ரவமென்றும்,       எலாவுயிர்க்கும்     -    ஸம்சார
சீவன்களெல்லாவற்றிற்கும்,   ஆகும்  -  ஆகாநின்ற,    இவைதாம்
- இவ்வாஸ்ரவங்கள், பத்தாகும் - பத்து விதங்களாகும், எ-று.

     இன்னும் விரிவாக இவ்வாஸ்ரவ பேதங்களை பதார்த்த சாரத்தில்
கண்டு கொள்ளலாம். தான் - அசை.                       (98)

 99. கோபனஞ் சமிதி தம்மஞ் சிந்தையீ ராற டக்கந்
    தாபனம் பரிசை வெல்லுந் தன்மையான் முனிவ னின்றால்
    வேபமொன் றிலாத சிந்தை வினைவழி விலக்கி நிற்குந்
    தீபநின் றகத்தைச் சேரு மிருளுண்டோ செறிப்பி தாமே.

    (இ-ள்.)  கோபனம்  -  திரிகுப்தியும்,  சமிதி  - பஞ்சசமிதியும்,
தம்மம்   -   தசதர்மமும்,   சிந்தை  -  த்வாதசானுப்பிரேட்சையும்,
ஈராறடக்கம்  -  த்வாதசஸம்யமும்,   தாபனம்  -   த்வாதசதபமும்,
(உடையவராய்),  பரிசை  -  த்வாவிம்சதி பரீஷஹங்களை, வெல்லும்
தன்மையால் - ஜெயிக்கும்  ஸ்வாபமுமாகிய இவற்றோடு, முனிவன் -
ஒரு  முனீஸ்வரன்,  நின்றால்  -  (வீதராக  சுத்தோப  யோகமாகிய
தியானத்தில்) நின்றால், வேபமொன்றிலாத - சலனமில்லாத, சிந்தை -
அந்தத்  தியானமானது,  வினைவழி -  கருமங்கள்  வரும் வழியை,
விலக்கி  நிற்கும்  -  தடைசெய்து  நிற்கும்,  தீபநின்ற  அகத்தை -
தீபமானது  இராநின்ற  விடத்தில்,  சேருமிருளுண்டோ - அந்தகாரம்
சேருமோ?  (சேராது),  செறிப்பு -  ஸம்வரபதார்த்த சேர்க்கையானது,
இதாம் - இதுவாம், எ-று.

     குப்தி,   சமிதி,   தர்மம்,  அனுப்ரேட்சை, த்வாதச   ஸம்யமம்
ஆகியவைகளின்  விவரங்கள்  இப்புராணத்தில்  13-வது  சமவசரண
சருக்கத்தில்  மேரு  மந்தரர்கள் தபத்திலும், த்வாதசதபசு நான்காவது
பூர்ண  சந்திரன்  அரசியற்  சருக்கத்தில்  சிம்மசந்திரர்   தபத்திலும்,
பரீஷஹங்களின்  விவரம்  7-வது  சக்கராயுதன் முக்திச் சருக்கத்தில்
சக்கராயுதன் தபத்திலும் விளங்கும்.                        (99)

 

 100. நின்றவந் தத்தின் மூன்று நினைப்புணர் வுதிர்ப்பை யாக்கு
     முன்புசென் றுயிர்க்கணின்ற வினையின்கண் மூழ்த்த மாதி
     நின்றவத் திதியி னோடு பயன்செய்யு மாற்ற லுய்க்கு
     மொன்றிய வகையி னாலே கணந்தொறு முருவத்தாரோய்.

     (இ-ள்.) உருவம் - ரூபம்  பொருந்திய, தாரோய் - மாலையை
யணிந்திரா  நின்ற  வைஜயந்த  மகாராஜனே!  நின்ற - முன்பாடலில்
சொல்லியிராநின்ற,   அந்தத்தின்  மூன்று  -  அந்தியத்தில்  உள்ள
த்வாதசஸம்யமம்   த்வாதசதபம்    பரீஷஹஜயம்  ஆகியவைகளும்,
நினைப்பு - தருமத்தியான சுக்கிலத்தியானங்