(இ-ள்.) (அவ்வாறியற்றிச் சிறப்புச்செய்யத் தொடங்கினபோது),
முழவு - மத்தளங்களும், தண்ணுமை - பேரிகைகளும், மொந்தை -
ஒர்கட்பறையும், முழை மழையின் - இருளோடுகூடி சப்திக்கின்ற
மேகத்தைப்போல, முழங்கின - அக்கோவிலுக்குள் சப்தித்தன,
வலம்புரி - வலம்புரிச் சங்குகளும், முரன்ற - முழங்கின, காகளம் -
எக்காளங்கள், கழல நின்று - வெளியாகத் தொனிபுறப்பட நின்று,
அழைத்திட்டன - கூவித் தொனித்தன, குழலோடு -
புள்ளாங்குழல்களோடு, வீணைக்குழாங்கள் - வீணை ஸமூஹங்களும்,
ஏங்கின - சப்தித்தன, எ-று. (27)
997. நிரந்த கின்னரர் கீத நிலமிசை
யரம்பை யர்மின்னி னெங்கணு மாடினார்
சுரந்த காதலிற் சொற்றழ காகநற்
கரங்கு வித்துர கர்க்கிறை யேத்தினான்.
(இ-ள்.) (இன்னும்), நிலமிசை - பூமிமேல், (வந்து
அச்சிறப்பிற்குக் கூடிய), கின்னரர் - கின்னர தேவர்களுடைய, கீதம் -
இசையானவை, நிரந்த - வரிசையாக அமைந்தன, எங்கணும் -
எவ்விடங்களிலும், மின்னின் - மின்னற் கொடியைப்போல்,
அரம்பையர் - தேவநர்த்தகிகள், ஆடினர் - நர்த்தனஞ் செய்தார்கள்,
உரகர்க்கு - பவண தேவர்களுக்கு, இறை - இறைவனாகிய
தரணேந்திரனானவன், சுரந்த - மிகுதியாகி உண்டாகி, காதலில் -
பக்தியின்விருப்பினால், சொற்று - புகழ் வசனங்களைச் சொல்லி,
அழகாக - இலக்ஷணமாக, நல் - நன்மைபொருந்திய, கரங்குவித்து -
ஹஸ்தமுகுளிதஞ் செய்து, ஏத்தினான் - கீழ்வருமாறு ஸ்தோத்திரம்
பண்ணினான், எ-று. (28)
வேறு.
998. கலையிலா வறிவனீ கலனிலா வழகுநீ
மலைவிலா மதனுநீ மறுவிலா மதனுநீ
யுலகினுள் வாயு நீ யுலகினுள் ளாயொரு
நிலையிலா நிலையைநீ யாகிலு மிறைவனீ.
(இ-ள்.) (அத்துதிகளாவன:-) கலையிலா - நிரம்சமாகியிருக்கும்,
(அதாவது : கிரமகணவிதாயிகளும் ஸ்வபாவ காலதேச அம்சங்களோடு
கூடிக் கிரமமாய் விருத்தியடைவனவுமான, மதி, ஸ்ரீுதி, அவதி,
மனபர்யய ஞானங்களைப் போலல்லாமல்), அறிவன் - ஸகலத்தையும்,
ஏகசமயத்தில் ஒருங்காக அறியும் கேவல ஞானமென்னும் அனந்த
குண மஹாத்மியமுடையவன், நீ - நீயே, கலனிலா - ஆபரண
ரஹிதமாகிய, அழகு நீ - காந்தியும் நீயே, மலைவிலா - இனி
மாறுதலையடைந்து விகார மெய்தாத, மதனு நீ - மோக்ஷாநந்தப்
பெருமையுடையவனும்நீயே, மறுவிலா - குற்ற மில்லாத, மதனு நீ -
மோக்ஷமார்க்கமும் அல்லது சமயமும் நீயே, உலகினுள் - சான் |