472மேருமந்தர புராணம்  


 

வனீ   -  திரிபுவனாதி  பதிகளால் பிரிய தமமாக பூஜிக்கப்படுபவனும்
நீயே,   மறுவிலா    வொருவனீ    -   களங்கமில்லாத (அதாவது :
கலத்தற்றன்மையில்லாத)   ஸ்வயம்பு      வானவனும் நீயே, மாதவத்
தலைவனீ  - மஹா தபஸையுடைய கணதராதி யதிவரர்களுக்கெல்லாம்
அக்ரணியானவனும் நீயே, சிறியயான் - அற்ப புத்தியையுடைய நான்,
நின்   குணம்    - உனது அனந்தமாகிய குணங்களை, செப்புதற்கு -
சொல்வதற்கு, அரியனீ - அருமையானவனும் நீயே, (என்பவைகளாம்),
எ-று.                                                  (31)

வேறு.

1001. இனையன துதிகள் சொல்லி யிருக்கையோ ரிரண்டு நான்கு
     மனமலி வணக்கந் தோறு மூவகைச் சுழற்றி மாண்பின்
     வினையற வெறிந்த கோனை விண்ணவ ரோடு மின்னுங்
     கனைகழ லுரகர் கோமான் கைதொழு திறைஞ்சிப் போனான்.

     (இ-ள்.)   வினை - கர்மங்களை, அற  - நீங்கும்படி, எறிந்த -
(வீதராக   சுத்தோபயோகதியானத்தால்)    நீக்கின,      கோனை -
தலைவராகிய   இச்சஞ்சயந்தபட்டார    கரை,     விண்ணவரோடு -
சதுர்ணிகாயாமரர்களோடு,   மின்னும்   -   பிரகாசியாநின்ற, கனை -
சப்தியாநின்ற,   கழல் - வீரகண்டயத்தை யணிந்த, உரகர்கோமான் -
தரணேந்திரனானவன்,  இனையன - இத்தன்மையனவாகிய, துதிகள் -
ஸ்துதி     வசனங்களை,     சொல்லி   -      தொடுத்துச்சொல்லி,
இருக்கையோரிரண்டு   - ஒப்பற்ற இரண்டுவித இருப்பில், (அதாவது :
காயோத்   ஸர்க்கமாக    நிற்பதிலும், பர்யங்காசனமாக இருப்பதிலும்,
(பொருந்தி),   மனமலி  - மனதில் நிறைந்த, (ஏகாக்கிரமாகிய), நான்கு
வணக்கந்தோறும் -(அரஹந்த, ஸித்த, ஸாஹு, தர்மமென்னும்) சதுர்வித
வணக்கத்துடன்,   மாண்பின் - (பக்தி பிரகிருஷ்ட முடிவில்) அழகாக,
கைதொழுது    -   ஹஸ்த    முகுளிதஞ்செய்து, மூவகைச் சுழற்றி -
(கருப்போபபாத   சம்மூர்ச்சனையால்   சுழலும் ஸம்ஸாரம் நீங்கும்படி
அவ்வாறு முகுளித்தகையை) மூன்றுதரஞ் சுழற்றி, இருக்கையோரிரண்டு
- (மீண்டும்)    ஒப்பற்ற    இரண்டுவித   இருக்கையில், (அதாவது :
சாஷ்டாங்கமாகவும்,   பஞ்சமுஷ்டியாகவு   மிருப்பதில்), இறைஞ்சி -
வணங்கி, போனான் - தனதிடம் சென்றான், எ-று.             (32)

     "இருக்கையோரிரண்டு"    என்னும்   தொடர்       உரையில்
இரண்டிடத்துங் கூட்டப்பட்டது.

1002. மாதக்க போதத் தாதித் தாபனும் விஞ்சை வேந்தன்
     மேதக்க தருள வேரம் விடத்தக்க தென்று மிக்க
     கோபத்தை யுபச மிப்பித் தருளினைக் கொண்டு நிற்கு
     நோதக்க நீதி யுள்ளா னுவலுதற் குள்ளம் வைத்தான்.