தாபத்தைத் தணிக்கு நீழல் போலுநல் லறத்தை மேவி
யாபத்தை யகற்றி யின்ப மூர்த்திநீ யாக வென்றான்.
(இ-ள்.) (ஆதலால் நீ இதை யனுசரியாமல்), கோபத்தீ -
குரோதாக்கினியானது, குடைய - மிகுதியாகப் பற்றியெரிந்து
உள்ளேகுடைய, ஓடி - சென்று, நரகத்தை - நரகத்தை, பல்கால் -
அநேகதரம், குறுகி - அடைந்து, வேபத்தின் - கருமசலன
கொதிப்பினால், வெதும்பிநின்று - சூடுற்றுநின்று, எவ்விலங்கினும் -
திரஸஸ்தாவரமாகிய எல்லா விலங்குகதிகளிலும், சுழன்று - சுழல்பட்டு,
வந்தாய் - வந்தனை, (இனி அவ்வாறு செய்யாமல்), தாபத்தை -
ஆதபத்தை, தணிக்கும் - தணிப்பிக்கின்ற, நீழல்போலும் - குளிர்ந்த
நிழலுக்கொப்பாகிய, நல்லறத்தை - நன்மையாகிய ஸ்ரீஜினதர்மத்தை,
மேவி - பொருந்தி, ஆபத்தை - பாவத்தினாலாகிய
ஆபத்துக்களையெல்லாம்,அகற்றி - நீக்கி, நீ - நீ, இன்பமூர்த்தியாக -
ஸ்வாத்மோத்தசுகத்தை யுடையவனாகக்கடவாய், என்றான் - என்று
சொல்லினான், எ-று. (35)
1005. அழலிடை மலையை யேந்தி வந்தவ னம்ம லைக்கீழ்
நிழலிடைப் பெற்ற வின்ப நீர்ப்பிடும் பைக்க ணின்பஞ்
சுழலவு முழுவை நிற்பத் தளிரினைக் கறித்து மெல்லு
முழையுறு மின்பம் போலும் விலங்குறு மின்ப மென்றான்.
(இ-ள்.) (இவ்வாறு சொல்லிப் பின்னரும்), இடும்பைக்கண்
இன்பம் - துக்கஸ்வரூபமாகிய ஸம்ஸாரத்தின் சுகமானது, அழலிடை -
அக்கினியினிடத்தில், மலையையேந்தி - மலையைத் தலையில்
தூக்கிக்கொண்டு, வந்தவன் - வந்துசேர்ந்தவன், அம்மலைக்கீழ் -
அந்தமலையின் கீழுண்டாகிய, நிழலிடை - நிழலினிடத்தே, பெற்ற -
அடைந்த, இன்பம் - சௌக்கியத்தின், நீர்ப்பு - தன்மையாகும்,
சுழலவும் - தன்னைச்சுற்றி எப்பக்கத்திலும், (சூழ்ந்து), உழுவை -
புலிகள், நிற்ப - கொல்லுதற்கு நிற்ப, தளிரினை - இலைத்துளிரை,
கறித்து - கடித்து, மெல்லும் - மெல்லுகின்ற, உழையுறும் - மானானது
அடைகின்ற, இன்பம்போலும் - சுகத்தைப் போலும், விலங்குறும் -
விலங்குகதி ஜீவன்கள் அடைகின்ற, இன்பம் - நிலையற்ற
சௌக்கியமானது, என்றான் - என்றும் சொன்னான், எ-று. (36)
1006. அருளிலார்க் கில்லை யின்ப மார்க்கலி யுலகத் தின்கட்
பொருளிலார்க் கின்ப மில்லா வாறுபோற் பொன்கொள் வாரிற்
றெரிவிலார்க் கில்லை யென்றுந் தீநெறிச் செல்ல னீங்கன்
மருளிலா மனத்தை யாய்நீ மனையற மருவு கென்றான்.
(இ-ள்.) (பின்னரும்), ஆர்கலி யுலகத்தின்கண் -
ஸமுத்திரஞ்சூழ்ந்த இப்பூவுலகத்தில், பொருளிலார்க்கு -
திரவியமில்லாதவர்களுக்கு, இன்பமில்லாவாறு |