ஸ்ரீ விஹாரச்சருக்கம் 485


 

     விமலனெனு மறிவன்மலர் மழைபொழிய விண்ணோர்
     கமலமிசை யுலவியொரு காவக மடைந்தான்.

     (இ-ள்.)   அமலம்   -   நிர்மலகரமான, நல - நன்மையாகிய,
ஆடியகத்து   -   கண்ணாடியினிடத்தில்,   ஆன  -   உண்டாகிய,
நிழல்போல   -   சாயைபோல,   துமிலமிடை  - சப்த காரணமாகிய
பரமாணுக்களால்   செறிந்த,   மூவுலகும்  -   இம்மூன்று லோகமும்,
தோன்றும் - தோற்றுகின்ற, அறிவுடைய - கேவலஜ்ஞானத்தையுடைய,
விமலனெனும் - விமல தீர்த்தங்கரனென்னும் பெயருடைய, அறிவன் -
அரஹந்த பரமதேவன், விண்ணோர் - தேவர்கள், மலர்மழை - புஷ்ப
வருஷங்களை,   பொழிய  -  சொரிய,   கமலமிசை  - தேவர்களால்
நிருமித்த   செந்தாமரைப் புஷ்பத்தின்மேல்  (வ்யோமகமனத்துவமாக),
உலவி  - ஸ்ரீ விஹாரமாகி,   ஒரு  -  ஒப்பற்ற,   காவகம் -  உத்தர
மதுரையிலுள்ள   ஒரு   உத்யானத்தை,  அடைந்தான்  - சேர்ந்தான்,
எ-று.                                                  (15)

 1026. அனகன்வினை யகலவெழுந் தருளுமெனு மளவிற்
      கனகநவ மணிமயமோர் கமலநறு மலரோ
      சனையகல முடையவத னிதழ்கடொறு மடவார்
      மனமகிழ நடநவில வானவ ரமைத்தார்.

     (இ-ள்.)   அனகன்  -  பாபரஹிதனாகிய விமல  தீர்த்தங்கரன்,
வினை  -  பவ்விய   ஜீவன்களுடைய   பாப   வினைகள், அகல -
நீங்கும்படி, எழுந்தருளும் - ஸ்ரீ விஹாரம் வரும், எனும் - என்கின்ற,
அளவில்   -   காலத்தில்,   வானவர்   -  தேவர்கள், கனகமயம் -
ஸ்வர்ணமயமும்,   நவ - ஒன்பது  விதமாகிய, மணிமயம் - இரத்தின
மயமுமாகிய,    ஓர் - ஒப்பற்ற, நறும் - வாசனையையுடைய, ஓசனை
யகலமுடைய   -   ஒரு   யோஜனை     யகலமுள்ள, கமலமலர் -
செந்தாமரைப்  புஷ்பத்தை, அதன் - அக்கமலத்தின்,  இதழ்கடொறும்
- இதழ்களிதழ்கடோறும்,   மடவார்   -   தேவ  அரம்பையர்களால்,
மனமகிழ - பார்க்கப்பட்டவர்கள் மனம் ஸந்தோஷத்தை யடையும்படி,
நடம் -  நர்த்தனங்களை,   நவில - செய்யும்படியாக,  அமைத்தார் -
நிருமிதஞ் செய்தார்கள், எ-று.

     ‘மயம்" என்பது இரண்டிடத்துங் கூட்டப்பட்டது.           (16)

 1027. வாசமலர் நான்கினவன் மேவியிறை வானோ
      ரோசனை யிரண்டகன்ற மண்டபமொன் றமைத்தா
      ரீசனெழுந் தருளுமென வெழின்மணிப்பொன் முத்தி
      னோசனைகண் மூன்றகன்ற வீதியுட னமைத்தார்.

     (இ-ள்.)  (அவ்வாறியற்றிமேலும்),  ஈசன் - திரிலோகநாதனாகிய,
அவன்  -  அந்த   விமலதீர்த்தங்கரனாகிய   ஜினேந்திரன், வாசம் -
வாசனைபொருந்திய, மலர் -