1044. ஏழடி யெழுந்து வந்தாங் கிறைவனை யிறைஞ்சி யேத்திப்
பாழியந் தடக்கை வேந்தர் பலகல மவர்க்கு
நல்கி
யேழுய ருலகந் தன்னு ளிருள்கெட வெழுந்த கோவின்
சூழொளி யனைய பாதந் தொழுதுநா மெழுக வென்றார்.
(இ-ள்.) ஏழடி -
ஏழடி தூரம், எழுந்து வந்து - எழுந்திருந்து
வந்து, ஆங்கு அவ்விடத்தில், இறைவனை - சுவாமியை, இறைஞ்சி -
வணங்கி, ஏத்தி - ஸ்தோத்திரம் பண்ணி, பாழி - பலம் பொருந்திய,
அம் - அழகிய, தடக்கை -
விசாலம் பொருந்தி தியாகம்
கொடுக்கும்படியான கையையுடைய, வேந்தர் - இராஜகுமாரர்கள், பல
கலம் - பலவாகிய ஆபரணங்களை, அவர்க்கு
- அச்செய்தி
சொல்லியவர்களுக்கு, நல்கி - கொடுத்து, ஏழுயருலகந்தன்னுள்
-
உயர்ந்த இந்த ஏழு லோகத்துள்ள பவ்வியப் பிராணிகளுக்கு, இருள் -
மித்தியாத்து வாந்தகாரம், கெட -
நீங்கும்படி, எழுந்த - ஸ்ரீ
விஹாரமாகி வந்த, கோவின் - ஸ்வாமியினுடைய, சூழொளியனைய -
நிறைந்த சூர்யன் ஒளிபோலப் பிரகாசத்தைப் பொருந்திய,
பாதம் -
பாதங்களை, நாம் - நாம், தொழுதும் - போய் வணங்குவோம், எழுக
- அதற்காகச் செல்க, என்றார் -
என்று பரிவாரங்களுக்கு
ஆக்ஞாபித்தார்கள், எ-று. (36)
1045. முரன்றன சங்க மெங்கும் முழங்கின முரச நின்று
துரங்கம் மேறி யானை மேன்மன்னர் தொடைய
லேந்தி
நிரந்தனர் நெளிந்த தன்று நிலமகண் முதுகு
நீடுங்
கரந்தன கடிய வாய கருவினைக் குழாங்க ளாங்கே.
(இ-ள்.) சங்கம்
- சங்கவாத்தியங்களை, முரன்றன - பலமாகச்
சப்தித்தன, எங்கும் - எவ்விடங்களிலும், முரசம் - பேரிகைகளானவை,
நின்று - வியாபித்து நின்று, முழங்கின - சப்தித்தன, மன்னர் - இந்த
இராஜகுமாரர்கள், தொடையல் - புஷ்பமாலை முதலியவைகளை, ஏந்தி
- தரித்துக்கொண்டு, யானைமேல் - யானையின்மேலும், துரகமம் -
(பரிவாராதியர்கள்) குதிரைகள் முதலானவைகளின் மேலும், ஏறி - ஏறி,
நிரந்தனர் - (அங்கே வந்து) நெருங்கினார்கள், அன்று - அப்பொழுது,
நிலமகள் முதுகு - பூமிதேவியின் முதுகு, நெளிந்தது - நெளிவுற்றது,
நீடும் - ஆத்மனிடத்தில் வெகு காலமா யிராநின்ற,
கடியவாய -
பொல்லாங்காகிய, கருவினைக் குழாங்கள் - பாபஸமூகங்களெல்லாம்,
ஆங்கு - அப்பொழுது, கரந்தன - மறைந்தன (அதாவது : நீங்கின),
எ-று.
(35)
1046. சந்தனக் குழம்பி னார்ந்த சந்திர காந்தச் செப்புங்
குங்குமக் குழம்பு விம்மு மிரவியின் குழவிச்
செப்பு |