பதின்மூன்றாவது
சமவசரணச்சருக்கம்.
1048. யோசனை பன்னி ரண்டி னும்பர்கோன்
றம்பங் காணாப்
பேசொணா வகையி னின்ற
பெருமித மழிந்த தியார்க்கு
மீசனை யிறைஞ்சி னார்க ளெய்தினா ரிறைவன் கோயில்
வீசுவெண் சாம ராதி பரிச்சந்த முழுதும் விட்டார்.
(இ-ள்.) யோசனை
பன்னிரண்டின் - பன்னிரண்டு யோஜனை
விஸ்தீர்ணமுள்ள சமவசரண பூமியின் பிராரம்பமாகிய பிரதம பூமியில்,
உம்பர்கோன் தம்பம் -
தேவர்களுக்கெல்லாம் நாதனாகிய
ஜினேந்திரனுடைய (கோயிலாகிய
சமவசரணத்தின் உள்ளே
செல்லும்படியான நாலு
மஹாதிக்குகளிலுள்ள
வீதியின்
மத்தியிலிராநின்ற) மானஸ்தம்பத்தை, காணா
- கண்டு, யார்க்கும் -
எவர்க்கும், பேசொணா வகையில் - சொல்லி
முடியாத விதமாக,
நின்ற - இராநின்ற, பெரு - பெரிதாகிய, மிதம் -
மித்தியாத்துவ
கர்மமானது, அழிந்தது - நிலை குலைந்தது,
வீசும் - வீசுகின்ற,
வெண் - வெளுப்பாகிய, சாமராதி - சாமரை முதலிய, பரிச்சந்தம் -
ராஜ பரிச் சின்ன பரிவாரங்களை, முழுதும் - முழுமையும், விட்டார் -
(இந்த மேருமந்தரரென்னுமிரண்டு
ராஜ குமாரர்களும்)
விடப்பட்டவர்களாகி, இறைவன் - ஸ்வாமியினுடைய,
கோயில் -
ஆலயத்தை, எய்தினார் - அடைந்தார்கள், (அவ்வாறடைந்து), ஈசனை
- திரிலோகாதிபதியாகிய
பகவானை, இறைஞ்சினார்கள்
வணங்கினார்கள், (எ-று). (1)
1049. யானையி னிழிந்து மானாங் கணத்திரு காத வீதி
மானபீ டத்தை மார்பி னளவுள மதிலை யெய்திக்
கானுறை கமலப் போதிற் கைதொழு திறைஞ்சி வாழ்த்தி
யூனந்தீர் தூயத் தானாங் கணம்புக்கார் கோசம் போயே.
(இ-ள்.) யானையின்
- ஆணையினின்றும், இழிந்து -
(மேருமந்தரராகிய விருவர்களும்)
இறங்கி, அளவுள -
யோக்கியோத்ஸேதத்தினை யுடைய, மதிலை -
தூளி சாலமென்னும்
மதிலையும், மானாங்கணத்து - அதன் அப்பியந்தர
பாகத்திலுள்ள
ப்ராஸாத சைத்ய பூமியையும், இருகாதவீதி - அப்பூமியில்
சதுர்மஹா
திக்குகளிலு மிராநின்ற இரண்டுகாத
மகலமான வீதிகளின்
பிரதமத்தில், மார்பின் மானம் - மார்பளவு உன்னதமுடைய,
பீடத்தை
- பிரதமபலிபீடத்தை, எய்தி - அடைந்து,
கானுறை - வாசனை
பொருந்திய, கமலப்போதில் - தாமரைப் புஷ்பத்திற்குச்
|