பட்டைகளாகிய அத்தம்பத்தின், நாற்றிசையும் -
அடியிலும் மேலேயும்
நாலுதிக்குகளிலும், துயரினை - துன்பத்தை, கெடுக்கும் - போக்கும்,
சித்தப்படிமை - ஸித்த பரமேஷ்டிகளின்
பிரதி பிம்பங்களாகிய
பிரதிமைகள், ஆம் - நிர்மிக்கப்பட்டனவாகும், எ-று. (4)
1052. நான்முகப் பூதத் துச்சி பாலிகைக் கமலப் போதின்
மேல்வைத்த செம்பொற் கும்பத் துச்சிமேற் பலகை தன்னிற்
பானிறப் பகடு பாலைப் பதுமைமேற் பொழியத் தேவி
மேன்முடிப் பதும ராக மிருபதோ சனைவி ளக்கும்.
(இ-ள்.)
நான்முகப் பூதத்து - அந்த மானஸ்தம்பத்தின்மேலே
நிருமிக்கப்பட்ட சதுர்முகத்தையுடைய
பூதத்தின், உச்சி -
தலையின்மேல் உள்ள, பாலிகை
- பாலிகையில், கமலப்
போதின்மேல் வைத்த -
தாமரைப்புஷ்பத்தைத் தலையில்
வைத்திராநின்ற, செம்பொற்
கும்பத்துச்சிமேல் -
சிவந்த
பொன்னாலாகிய பூர்ண கும்பத்தின்மேலே,
பலகைதன்னில் -
பலகையாகச்செய்து அதில், பதுமை
- லக்ஷுமிதேவி உருவம்
நிருமித்து, மேல் - அந்த லக்ஷ்மிதேவிமேல், பால்நிறம் - வெள்ளை
நிறத்தையுடைய, பகடு - யானைகளானவை, பாலை -
க்ஷீரத்தை,
பொழிய - சொரியும்படி செய்திருக்க,
அத்தேவி - அந்த
லக்ஷ்மிதேவியின், முடிமேல் - கிரீடத்தின்மேலிராநின்ற,
பதுமராகம் -
பத்மராகரத்தினமானது, இருபதோசனை - இருபதுயோசனை தூரம்,
விளக்கும் - பிரகாசிப்பதாகும், எ-று. (5)
1053. மணிமய மாய சுக்கம்
நான்றுமங் கலங்க ளேந்தி
யணிபெற நின்ற நான்கா
மந்தமா னத்தம் பத்தை
யிணையிலார் வலங்கொண்
டேத்தி யிறைஞ்சிப்போய்க் கோச நீல
மணிநிலத் தகழி மார்பி னளவுள மதிலைக் கண்டார்.
(இ-ள்.) மணிமயமாய
- இரத்தினமயமாகிய, சிக்கம் - உறிகள்,
மங்கலங்கள் - அஷ்டமங்கலங்களை, ஏந்தி
- தரித்து, நான்று -
அந்த லக்ஷிமியிருக்கப்பட்ட பலகையினின்றும் தொங்கப்பட்டனவாகி,
அணிபெற - அழகு பெறும்படி, நின்ற - (ப்ராஸாதசைத்ய
பூமியாகிய
முதல் பூமியில் சதுர் மஹாதிக்கு வீதிகளில்) இராநின்ற, நான்காம் -
நாலாகிய, அந்தமானத் தம்பத்தை -
அந்தமான ஸ்தம்பங்களை,
இணையிலார் - உபமையில்லாத
அழகையுடைத்தாகிய இந்த
மேருமந்தரரிருவர்களும், வலங்கொண்டு -
பிரதக்ஷணமாக வந்து,
ஏத்தி - ஸ்தோத்திரம் பண்ணி, இறைஞ்சி - வணங்கி,
கோசம்போய்
- அந்த ப்ராஸாத சைத்ய பூமியின் மற்ற
பாதியாகிய ஒரு குரோச
தூரமும்போகி, (அவ்விடத்திலிராநின்ற),
மார்பினளவுள -
மார்பளவுயரமுள்ள, மதிலை - மதிலையும், (அதன்
அப்பியந்தர
பாகத்திலுள்ள), நீலமணி நிலத்து - இந்திர
நீலரத்தினத்தினாலாகிய
நிலத்தையுடைய, அகழி -
|