(இ-ள்.)
உதய கோபுரமது
- உதயதரமென்னும்
அக்கோபுரமானது, காதமூன்று - மூன்று
காதம், உயர்ந்து -
உன்னதமாகி, இரண்டுகாத நீண்டு - இருகாதம்
நீளமுடையதாகி,
வாய்தல் - வாசற்படியானது, காதமாய்
அகன்று - ஒரு காதம்
அகலமாகி, சிறப்பு - அக்ஷ்டமங்கலங்களையுடைய, மும்மைப்படிமை -
மூன்று ஜினப்பிரதிமைகள், (நிலைக்கொன்றாக
விராநின்ற),
முன்னிலையதாகி - மூன்று மேல் நிலைகளையுடையதாகி, வாய்தல் -
அக்கோபுரத்தின் வாசற்படியின் இரு பக்கங்களிலும், சோதியுள் -
(உண்டாகிய) ஜோதிமயத்தினால், குளித்து - தங்கள் ஜோதியானது
மறையப்பட்டு, சோதிடத் தேவர் - ஜோதிஷ்கத்
தேவர்கள், காப்ப -
துவார பாலகர்களாகிக் காவல் செய்ய,
போதரும் - லட்சணம்
நிறைந்திரா நின்ற, பதாகை - துவஜக்
கொடிகள், சூழ்ந்தது -
சூழ்ந்திராநின்றதாக, ஆம் - ஆகும், எ-று. (13)
1061. வில்லைஞ்ஞூ றகன்று யர்ந்து வெள்ளியா லியன்று சென்னிச்
சொல்லிய வகையி னாலே சுருங்கிப்பொற் சூட்ட தாகி
வல்லிமுந் நிலையட் டாலைக் கொடியுடை மதிலி னின்ற
சொல்லிய கோபு ரத்தைத் தொழுதுபூச் சிதறிப் புக்கார்.
(இ-ள்.)
வில்லைஞ்ஞூறு - ஐந்நூறுவில்லு,
அகன்று -
அடியிலே அகலத்தையுடையதாகி, உயர்ந்து
- 1பின்னால்
சொல்லப்பெற்ற உன்னதத்தை யுடையதாகி,
வெள்ளியால் -
வெள்ளியினால்,
இயன்று
- செய்யப்பட்டதாகி,
சொல்லியவகையினாலே - 2பின் சொல்லப்பட்ட
விதத்தினாலே,
சுருங்கி - அடியகலத்தினின்றும் மேலே சுருங்கப்பட்டதாகி,
பொற்
சூட்டதாகி - பொன்னாலியன்ற தலைக்கட்டையை யுடையதாகி, வல்லி
- அளவின் பிரகாரமாகிய, அட்டாலை - மேற்றிண்ணையை யுடைய,
முந்நிலை - மூன்று நிலைகளை யுடையதாகி, கொடியுடை - துவஜக்
கொடிகளையும் உடைய, மதிலின் - உதயதரமென்னும்
மதிலிலே,
நின்ற - சேர்ந்து வீதிகளின் நேரில்
நின்ற, சொல்லிய - முன்
பாடலில் சொல்லப்பட்ட, கோபுரத்தை
- உதயதர கோபுரத்தை,
தொழுது - வணங்கி, பூச்சிதறி - புஷ்பங்களைத்தூவி,
புக்கார் -
அதனுள் ஆகிய வன பூமியை அடைந்தார்கள், எ-று. (14)
1.இச்சருக்கத்தில் 80-வது பாடலில் சொல்லப்பட்ட
உன்னதமாகியது.
2.இச்சருக்கத்தில் 34-வது பாடலில் சொன்னவகைபோல்
சுருங்கப்
பெற்றது.
1062. பலநிறம் பயின்ற பூமி பரமன தறிவு போல
வுலகெலா மடங்கு மேனு முள்ளிரு காத மாகி
நிலவிய மதிலின் மூலை நின்றகுட் டியங்க ணான்கிற்
பலவன மாகிப் பைம்பொன் மதிலினைச் சூழ்ந்த துண்டே.
|