502மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

  (இ-ள்.) பலநிறம் - பலவர்ணங்களினால், பயின்ற - செய்திராநின்ற,
பூமி -   அந்த   வன   பூமியானது, பரமனது -  ஸ்வாமியினுடைய,
அறிவுபோல - கேவல  ஞானத்தைப்போல, உலகெலாம் - இவ்வுலகத்
துள்ளவர்களெல்லாம்,  அடங்குமேனும் -  வந்தடங்கினாலும்,  உள் -
அதனுள்ளகலமானது,  இருகாதமாகி  -  இரண்டுகாத விஸ்தீர்ணத்தை
யுடையதாகி,    மதிலின்    -    அப்பூமியின்     வெளிப்புறத்தில்
உதயதரமென்னும்   மதிலையும்   உட்புறத்தில்  பிரீதிதரம்  என்னும்
மதிலையுமுடையதாய்,  நிலவிய  - பிரகாசித்த, மூலை - அப்பூமியின்
வீதிவழிகள்  தவிர  மூலைகளாகிய  சதுஷ்கோணங்களிலும், நின்ற -
நடுவில் நின்ற,  குட்டியங்கள் - மேடைகள், நான்கில் - (கோணத்துக்
கொன்றாக)  நாலாகிய  அம்மேடைகளையும்  உடையதாகி,  பைம் -
பசுமை   பொருந்திய,    பொன் -  பொன்னாலாகிய,  மதிலினை -
ப்ரீதிதரமென்னும் மதிலையும்,  சூழ்ந்தது - பரிவேஷ்டித்ததாகி, பல -
பலவாகிய விருக்ஷங்களையுடைய,  வனமாகி  -  வன  பூமியென்னும்
பெயருடையதாகி,  உண்டு - நாலாம் பிரகாரமாகி யிராநின்றது, எ-று.
(15)

 1063. குட்டியத் திரும ருங்குங் கோபுரத் துயர மாகி
      யெட்டுள தூபை நின்ற விஞ்சிக்கு ளெட்டே யாகும்
      வட்டவெண் குடைய சேதி மரங்களெட்டிவற்றைச் சார்ந்த
      வெட்டுள வதனுக் காதி பாதவ மிவற்றி னிப்பால

   (இ-ள்.)    குட்டியத்து  -   (அந்தவன  பூமியின்  கோணத்தில்
நடுவிலிரா  நின்ற)  மேடைகளினுடைய,  இருமருங்கும்  -   இரண்டு
பக்கங்களிலும்,  கோபுரத்துயரமாகி  -   முதல்   கோபுரத்தினுடைய
உயரத்தையுடையதாகி,    எட்டுள   -   எட்டாயிராநின்ற,  தூபை -
ஸ்தூபைகளானவை,  நின்ற  -   நிலைபெற்றுள்ளன,  இஞ்சிக்குள் -
மதிலுக்குள்  இராநின்ற  அவ்வன பூமியில், எட்டேயாகும் - மொத்த
ஸ்தூபைகள் எட்டேயாகி யிராநின்றன, (அதாவது : மேடை ஒன்றுக்கு
இரண்டு ஸ்தூபைகளாகி, நாலு கோணத்துள்ள மேடைகளுக்கும் எட்டு
ஸ்தூபைகளாகும்).  வட்டம்  - வட்டமாகிய, வெண் - வெளுப்பாகிய,
குடைய -   சத்திரத்தியத்தை     மேலேயுடைய,    சேதிமரங்கள் -
(ஜிநபிம்பங்களையுடைய)  சைத்ய  விருட்சங்கள்,  இவற்றை  - இந்த
ஸ்தூபைகளை,    சார்ந்த    -    சேர்ந்தவைகளாய்,    எட்டுள -
எட்டாகியிராநின்றன     (அதாவது :   அவ்வன   பூமியில்    ஒரு
கோணத்திலிரண்டு விருட்சமாக நாலு கோணத்திலும் சேர்த்து எட்டுச்
சைத்ய விருட்சமாகும்), இவற்றினிப்பால் -  அவ்வன  பூமியில்  இந்த
சைத்ய             விருட்சங்களுக்கிப்பால்,         அதனுக்கு -
அவ்விருட்சக்கூட்டத்திற்கு,    ஆதி  - முதலிலே, பாதவம் - கற்பக
விருட்சங்கள், (ஒரு   கோணத்திலிரண்டாக),  எட்டுள - எட்டுள்ளன,
எ-று. (16)

 1064. வீதியைச் சார்ந்து முக்கோண் வட்டநாற் சதுர மாகி
      நீதியா னின்ற வாவி யெட்டுமூன் றிவற்றை யெய்தி