சமவசரணச்சருக்கம்503


Meru Mandirapuranam
 

   யோதிய வகையி னென்றிற் குளித்துவாய் பூசி யொன்றிற்
   போதுகொண் டொன்றின் மண்ணோர் பணிவர்போய்த் தூபை
                                          யெய்த.

   (இ-ள்.)  வீதியைச்சார்ந்து  -       அவ்வனபூமியில்     மஹா
வீதிகளைச்  சேர்ந்து,  (அதாவது :   வீதியிலிருந்து  கோணத்திற்குப்
போகின்ற  வழியில்  பிரதமத்தில்), முக்கோண் - முக்கோணமாகிய,
வாவி -   தடாகமும்,   (அதனப்பியந்தர   பாகத்தில்),   வட்டம் -
வட்டமாகிய   தடாகமும்   (அதற்குள்ளே),  நாற்சதுரமாகி  -  நாற்
சதுரமாகிய தடாகமும் உண்டாகி, நீதியால் - வரிசையாக ஒன்றின்பின்
னொன்றாகி,  எட்டு   மூன்று  -   அவ்வனபூமியில்   இருபத்துநாலு
தடாகங்கள், நின்ற - நிலைபெற்றுள்ளன. ஓதியவகையின் - இப்போது
சொன்ன கிரமத்தினாலிராநின்ற,  இவற்றை  -  இந்தத் தடாகங்களை,
எய்தி -  அடைந்து,  ஒன்றிற்குளித்து   -   முதலில்  இருக்கப்பட்ட
முக்கோணமாகிய  குளத்தில்  ஸ்நானஞ்செய்து,  ஒன்றில் வாய்பூசி -
வட்டமாகிய    மற்றொரு  குளத்தில்  தந்ததாவனஞ்  செய்து  வாய்
கொப்பளித்துச் சுத்தம்  பண்ணிக்கொண்டு, ஒன்றில் போது கொண்டு
- நாற்    சதுரமாகிய     குளத்தில்     உள்ள    புஷ்பங்களைப்
பறித்துக்கொண்டு,   மண்ணோர்  -  இப்பூமியிலுள்ள  மனுஷ்யர்கள்,
தூபையெய்த - ஸ்தூபைகளையடைந்து,  பணிவர் - வணங்குவார்கள்,
எ-று. (17)

 1065. திரளரைக் கோச மோங்கிச் சினைகளெண்டிசையு மோடிப்
      பருதியோர் கோச மாகிப் பயின்றகற் பகத்த சோலைக்
      கிருமடி யுயர்ந்த சோக மேழிலம் பாலை செண்பகந்
      திருமலி மாவுங் கீழைத் திசைமுதன் மாம ரங்கள்.

    (இ-ள்.)    திரள்  -     அடியினின்றும்    திரட்சியையுடைய
ஸ்தம்பமானது,    அரைக்கோசம்    ஓங்கி   -   அரைக்குரோசம்
உன்னதமாகி,   சினைகள்   -   அதன்   மேல்   கிளைகளானவை,
எண்டிசையும் -  எட்டுத்  திக்குகளிலும்,  ஓடி  -  சென்று, பருதி -
அப்படிச்  சென்ற   மேற்பரப்புச்  சுற்றளவு  விஸ்தீர்ணமானது,  ஓர்
கோசமாகி - ஒரு  குரோசமாகி,  பயின்ற  -  உண்டாகிய, கற்பகத்த
சோலைக்கு -   கற்பக   விருக்ஷ   சோலைக்கு,  இருமடியுயர்ந்த -
இரட்டித்த    உன்னதமுடைய,    அசோகம்    -  அசோகமரமும்,
எழிலம்பாலை  -  எழிலம்பாலை  மரமும்,  செண்பகம்  - செண்பக
விருட்சமும், திருமலி -  அழகு நிறைந்த, மாவும் - மாமாமும், (ஆக)
கீழைத்திசை முதல் - அவ்வன  பூமியில்  கிழக்குத் திக்கு முதலாகப்
பிரதக்ஷிணமாக   வரிசைக்கிரமத்தால்,   மாமரங்கள்  -  பெரிதாகிய
மரங்கள் இராநின்றன, எ-று. (18)

 1066. ஆடகத் தியன்றி ரண்டு கோபுரத் தளவுஞ் சென்ற
      நாடக சாலை மூன்று நிலையினா லெட்டுப் பந்தி
      யூடுசென் றாடு நல்லார் சோதிடர் தேவி மார்கள்
      வீடில பலவு, நின்ற வீதியி னிரும ருங்கும்.