512மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)   (அக்கோபுரத்தினுள்   கற்பகவிருட்ச  பூமியின்  சதுர்
மஹா வீதிகளிலும்),  வடிவுடைப்பீடத்து  - பிரதமத்தில் உள்ள நல்ல
ரூபம் பொருந்திய பலிபீடத்திற்கு, இப்பால் - அப்பியந்தரத்தில், மணி
- அழகிய,   திரள்   -   ஸ்தம்பத்தில்,   மலர்ந்த   -   மேனின்று
விசாலித்ததாகிய,  மிக்க  -  மிகுதியாகிய,  திக்கை  -  சதுர்  மஹா
திக்குகளை,   அளப்பன  போன்று  -  அளவிடுவனபோல,  நான்கு
விடவங்கள்  -   நாலு   கிளைகளில்,  சித்தப்படிமைகள்  -  ஸித்த
பிரதிமைகள்,    இருந்த   -   இராநின்றதாகிய,   சித்தப்பாதவம் -
சித்தயாதன விருட்சமானது, பயின்ற - நிலைபெற்றிருப்பதாம், போதும்
- அதன் புஷ்பங்களும், குடையின்,  சத்திரத்தைப்போல, மீதணிந்து -
அப்பிரதிமைகளின்  சிரமேலணியப்பட்டு,  வீதி  நான்கிலும்  - நாலு
மஹா   வீதிகளிலும்,   குலாவும்   -   பிரகாசிக்கும்,    இப்பால் -
அதனப்பியந்தர பாகத்தில், எ-று.

    இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (37)

 1085. அஞ்சுட ருமிழுந் தூபை யறிவனா லயத்தைச் சூழ்ந்த
      மஞ்சுற நிமிர்ந்து மாழைத் தலங்கள்பன் னிரண்ட வாகி
      யஞ்சன மலையைச் சூழ்ந்த ததிமுக மனைய நான்கா
      யிஞ்சிகோ புரங்கணாற்பாலுடையவாந் தடங்கணான்காம்.

    (இ-ள்.)   அறிவன் - கேவல ஞானத்தையுடைய பகவானுடைய,
ஆலயத்தை  -     இருப்பிடமாகிய      கோயிலை,     சூழ்ந்த -
பரிவேஷ்டித்திராநின்ற,  இஞ்சி  கோபுரங்கள் -  கல்யாணதர  மதில்
கோபுரங்களினுடைய,   நாற்பால்  -  நான்கு  மஹா திக்குகளிலாகிய
ஆறாம் பிராகாரமாகிய  கல்பகவிருட்ச  பூமியின்  வீதிகளில், அம் -
அழகாகிய, சுடர் - பிரகாசத்தை,   உமிழும்  - சொரிகின்ற, தூபை -
ஸ்தூபைகளானவை,   மஞ்சுற   -   மேகமண்டலத்தைப்  பொருந்த,
நிமிர்ந்து - உயர்ந்து,  மாழை  -  ஸ்வர்ணத்தினாலாகிய, தலங்கள் -
ஸ்தலங்களானவை   (அதாவது   :  நிலைகள்),  பன்னிரண்டவாகி -
பன்னிரண்டையுடையனவாகி,           அஞ்சனமலையை       -
நந்தீஸ்வரத்வீபத்தில்  இராநின்ற  அஞ்சன  பர்வதத்தை,   சூழ்ந்த -
சூழ்ந்திராநின்ற, ததிமுகமனைய - ததிமுகபர்வதத்திற்குச் சமானமாகிய,
நான்காயுடையவாம் - நாலாகியிரா நின்றவனவாம், தடங்கள் நான்காம்
- மற்றும்  அந்த  வீதிகளில்  வீதிக்கு  ஒன்றாக  நாலு  தடாகங்கள்
உள்ளனவாம், எ-று. (38)

 1086. நந்தைபத் திரைச யந்தை பூரநா மத்த வாவி
     வந்தமா திக்கி னான்கில் வாரியைத் தெளித்த போழ்தின்
     முந்தைய பிறப்பை யோர்வார் முன்பினேழ் பவத்தைக் காண்பார்
     சிந்தைசெய் தவற்றைப் பார்க்கத் தெளிக்கநோ யாவுந் தீரும்.

    (இ-ள்.)  வந்த  -  அந்தக் கல்பக விருட்ச பூமியில் வரப்பட்ட,
மாதிக்கில் - மஹாதிக்கு வீதிகளில் வரிசையாக பூர்வதிசையில், நந்தை
- நந்தையென்றும்,