விடங்கள், சூழ்ந்த
- சூழ்ந்திராநின்ற,
சம்பொன் - சிவந்த
பொன்னாலாகிய, வேதிகையவாகும்
- சுற்று
மதில்களையுடையனவாகும், எ-று. (47)
1095. மஞ்சலி பஞ்சமளி யுடையவிட மொருபா
லுஞ்சன்மிசை யஞ்சொலவ ராடுமிட மொருபால்
வஞ்சியனை யார்களொடு மைந்தரிட மொருபா
லிஞ்சியத னகத்தினை யியம்பிடவொ ணாதே.
(இ-ள்.)
பஞ்சமளியுடைய - பஞ்சு
மெத்தைகளையுடைய,
மஞ்சம் - கட்டில்களினாலே, மலி -
நிறைந்திராநின்ற, இடம் -
இடங்கள், ஒருபால் - ஒரு பக்கத்திலாகும், உஞ்சல்மிசை -
ஊஞ்சல்
பலகையின்மேல், (உட்கார்ந்து கொண்டு), அஞ்சொலவர் -
அழகிய
சொல்லையுடைய ஸ்த்ரீமார்கள், ஆடும் - ஊசலாடுகின்ற, இடம் -
இடமானது, ஒரு பால்
- ஒரு பக்கத்திலேயாகும்,
வஞ்சினையார்களொடு -
புஷ்பக்கொடிக்குச் சமானமாகிய
ஸ்த்ரீமார்களோடு, மைந்தர் - புருஷர்களும், (தங்கும்படியான),
இடம்
- இடமானது, ஒருபால் - ஒரு பக்கத்திலாகும், இஞ்சிய
தன் -
கல்யாண தரமென்னும் அந்த மதிலின், அகத்தினை -
அப்பியந்தர
பாகத்திலான கல்பகவிருட்ச பூமியை, இயம்பிடவொணாது - சொல்ல
முடியாது, எ-று. (48)
1096. மலையனைய நிலையுடைய மாதவர்க ளொருபால்
விலையமற வெறிதரும விரோசனர்க ளொருபான்
மலைவின்மொழி நிலையுணல மௌனதர ரொருபா
னிலைபனியின் வெயின்மழையி னீங்கலில ரொருபால்.
(இ-ள்.) மலையனைய
- பர்வதம்போல் சலனமில்லாத,
நிலையுடைய - ஏகாக்கிரத்தியானத்தில்
நிலைத்து நிற்கின்ற
நிலையினையுடைய, மாதவர்கள் - மஹாதபஸையுடைய முனிவரர்கள்,
ஒருபால் - ஒரு பக்கத்திலிராநின்றார்கள்,
விலையம் - ஸம்ஸார
ஹேதுவாகிய குற்றங்களெல்லாம், அற - நீங்கும்படி, எறிதரும் -
சேதிக்கின்ற, அவிர் - பிரகாசம்
பொருந்திய, ஓசனர்கள் -
உபாத்தியாய குணத்தையடைந்தவர்கள், ஒருபால் - ஒரு
பக்கத்திலிரா
நின்றார்கள், மலைவில் - மாறுபாடில்லாத,
நல் - நன்மையாகிய,
மொழி நிலையுள் - தர்ம வசனத்தில் நிலைத்திருக்கின்ற,
மௌனதரர்
- மவுன விரதத்தைத் தரிக்கப் பெற்றவர்கள்,
ஒரு பால் - ஒரு
பக்கத்திலிரா நின்றார்கள், பனியின் -
பனி காலத்தும், வெயில் -
கோடை காலத்தும், மழையின் - வர்ஷா காலத்தும், நிலை -
நின்ற
யோக நிலையில், நீங்கலிலர் - நீங்காதவர்களாகிய
காயக்கிலேச
தபமுடையவர்கள், ஒருபால் - ஒரு பக்கத்திலிரா நின்றார்கள், எ-று. (49)
1097. உக்கதவர் தித்ததவர் தத்ததவ ரொருபான்
மிக்கதவர் கோரதவர் மேவுமிட மொருபான்
|