சமவசரணச்சருக்கம்519


Meru Mandirapuranam
 

    (இ-ள்.)   (ஒரு நூலில்),   முதல்  -  பிரதமத்திலும்,  இறுதி -
அந்தியத்திலும், நடுவண் - மத்தியிலும், ஒரு பதமது - ஒரு  தத்தை,
கொண்டு - தெரிந்துகொண்டு,  அந்நூல் - அந்த சாஸ்திரத்தினுடைய,
விதி -   கிரமத்தை,    முழுதும்  -    முழுமையும்,    அறிஞர் -
அறியும்படியாகிய  கோஷ்ட  புத்திகளும்,  சிலர்   -  சில பேர்கள்,
மூலபதம் -  முதலிலொரு  பதத்தை,  மேவி  -  பாருந்தி, முதல் -
ஆதியும்,   நடு  -   மத்தியும்,  முடிய  -  அந்தியமுமாகிய  சகல
விதிகளையும், உணர்வார் - அறிபவர்களாகிய பீஜபுத்திகளும், மதியின்
- புத்தி  யதிசயத்தினால்,   புகை   பன்னிரண்டின்  -  பன்னிரண்டு
யோஜனை   தூரத்திலிருந்தும்,  வரும்  -   உண்டாகி   வருகின்ற,
மொழிகள்   -    வசனங்களை,    அறிவார்     -    விவரமாகத்
தனித்தனியாகத்    தெரிந்துகொள்பவர்களாகிய,  சம்பின்னமதிகள் -
ஸம்பின்னஸ்ரீாத்திரத்துவ   புத்தி  பலத்தையுடையவர்களும், எ-று.

           இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (52)

 1100. மதியவதி சுதமிருது விபுலமதி ஞானத்
      ததிசயர்க ளனகார கேவலிக ளொருபால்
      விதியிலணு மாதிவிகு வணைவலவ ரொருபான்
      மதியின்வரு சாரணநன் மாமுனிவ ரொருபால்.

   (இ-ள்.)   மதி  -  மதிஜ்ஞான   பலமுள்ளவர்களும்,  அவதி -
அவதிஜ்ஞானிகளும், சுதம் - சுருதஜ்ஞான ஸம்பன்னர்களும், இருது -
ருஜுமதிமனப்  பரியய  ஞானிகளும்,  விபுலமதி ஞானத்ததிசயர்கள் -
விபுலமதி     மனப்பரியய     ஞானாதிசயஸமுத்     பன்னர்களும்,
அனகாரகேவலிகள் -  இதர   கேவலிகளும்,  ஒருபால்  -     ஒரு
பக்கத்திலிருப்பார்கள்,  விதியில் - கிரமத்தோடு கூடிய, அணுமாதி -
அணுமா   முதலாகிய,    விகுவணைவலவர்  -    விக்கிரியாரித்திப்
பிராப்தர்கள்,  ஒருபால்  -   ஒருபக்கத்திலிருப்பார்கள்,   மதியின் -
சந்திரன் ஆகாயத்திற்  சென்று  வருவதுபோல,  வரும் ஆகாயத்திற்
சஞ்சரித்து வருகின்ற, சாரண - ஆகாச சாரணத்துவரித்தியையடைந்த,
நல் -   நன்மையாகிய,   மா -  பெருமை  பொருந்திய,  முனிவர் -
முனிவரர்கள், ஒருபால் - ஒரு பக்கத்திலேயிருப்பார்கள், எ-று. (53)

 1101. வேதமொரு நான்கைவினை யத்தைமிக மேவி
     யோதுபவர் கேட்பவ ருரைப்பவர் நிருக்தர்
     வாதியர்கள் கற்றமற வாதமதி யோர்கண்
     மேதகைய சிந்தனைகண் மேவுநர்க ளொருபால்.

   (இ-ள்.)    வேதமொரு     நான்கை  -    (பிரதமானுயோகம்,
கரணானுயோகம்,  சரணானுயோகம், திரவ்வியானுயோகம்,  என்னும்)
சதுர்  வேதங்களையும்,   வினையத்தை   மிகமேவி -   மிகுதியான
வணக்கத்துடன் கூடி, ஓதுபவர் - படிப்பவர்