யில், இனைய - இத்தன்மையாகச் சொல்லப்பட்ட, முனி -
முனிவரர்
கணங்களிரா நின்றார்கள், (அந்த ஆறாம் பிராகாரத்தின்
அப்பியந்தர
பாகத்தில்), வில்லுடைய - பிரகாசம்
பொருந்திய, (அல்லது ஒரு
விற்பிரமாண முயரமுள்ள), கனகமணி வேதிகை - ஸ்வர்ணத்தினாலும்
ரத்தினத்தினாலுமாகிய வேதிகையானது, (உண்டு), அதனின் -
அந்தக்
கற்பக விருட்சாவனியில், மலி - (மதில்கள் கோபுரங்கள்
ஸ்தூபைகள்
முதலியவைகளில்) நிறைந்திராநின்ற, கொடி - துவஜக்கொடிகளையும்,
இனைய - (இச்சருக்கத்தின் 34 - வது பாடல் முதலாக
இதுவரையில்
வர்ணிக்கப்பட்ட லக்ஷணங்களையுடைய) இத்தன்மையாகிய,
நிலங்களை - அந்த ஆறாம் பிராகாரத்தில்
பலவிதமாக அமைந்த
பூமிகளையும், அவ்வேந்தர் - அந்த மேருமந்தரரென்கிற அரசர்கள்,
பணிந்து - வணங்கி, ஏத்தி - ஸ்தோத்திரம் பண்ணி,
அனகமனராய்
- பாபரஹித சித்தமுடையவர்களாய், இறைஞ்சி - மறுபடியும் வணங்கி,
ஆசிரம் - (முன் சொன்ன
கனகமணி வேதிகையினுடைய
அப்பியந்தரத்தில் ஏழாம் பிராகாரமாகிய
கிரஹாங்கண பூமியின்
மஹா வீதிகளில் பிரதமத்திலிரா
நின்ற) ஜெயாஸ்ரீயமென்னும்
பெயரையுடைய முகமண்டபத்தை,
அடைந்தார் - போய்ச்
சேர்ந்தார்கள், எ-று. (56) வேறு.
1104. கடித டத்தள வுள்ள வரண்டகைக்
கொடிநி ரைத்த சயாசிரங்
கோசத்தி
னுடன கன்றதோ ரோசனை
யோக்கமுங்
கடன தாயது காவத மாகுமே.
(இ-ள்.)
கடிதடத்தளவுள்ள - துவஜக் கொடிச்
சீலையின்
பேர் பாதிப்பிரமாணமுள்ள,
வரண்டகைக் கொடி -
வரண்டகப்பதாகையினால், நிரைத்த - நெருங்கி வரிசை
பெற்றிரா
நின்ற, சயாசிரம் -
அந்த ஜயாசிரய மண்டபமானது,
கோசத்தினுடனகன்றது - ஒரு
குரோசத்துடனே பொருந்திய
அகலத்தையுடைய தாய், ஓரோசனையோக்கமும்
- உன்னதம் ஒரு
யோஜனையும், கடனதாயது -
பாக்கியாய் நின்ற நீளமானது,
காவதமாகும் - ஒரு காதமுமாகும், எ-று. (57)
1105. மாதி ரத்தெழும் மாமதி வான்கட
லோத மேற வுடன்புகு மாறுபோ
னாதன் மாநகர் முன்றிலின் வாய்தல் வாய்ப்
போது வார்புகு வார்கண் மிடைந்தறார்.
(இ-ள்.) மாதிரத்து - ஆகாயத்தில், எழும் - தோன்றுகின்ற, மா
- சிறந்த, மதி - சந்திரனுடைய பிரகாசத்தைப் பெற்ற, (அதாவது :
பூரண சந்திரன் உதயஞ்
|