மந்திரத்தையணிந்து
- அந்த
ஜயாஸ்ரீயமண்டபத்து
அப்பியந்தரமாயுள்ள உப்பரிகையின் அப்பியந்தரத்தில்
அழகாகிச்
சேர்ந்து, பொற்பீடிகை - பொன்னாலாகிய ஒரு
பீடமிரா நின்றது,
இடை - அப்பீடத்தின்
மத்தியில், இந்திரத்துவசம்
-
இந்திரத்துவஜமென்னுங் கொடிகளானவை,
நின்றன - நிலை
பெற்றுள்ளன, சந்திரபுளகத்து -
சந்திர கிரணத்தைப் போல
பிரகாசிக்கின்ற கண்ணாடியினாலாகிய,
திரளின் - அந்ததுவஜ
ஸ்தம்பத்தினது, இடை - உச்சியினின்றும்,
வந்து - தாழ்ந்து
வரப்பட்டனவாகி, நித்திலமாலைகள் -
முத்து மாலைகள், நான்ற -
தொங்கின, எ-று. (63)
1111. சுந்த ரத்திரண் மாமணி சூடின
மின்ப ரப்பின் மிளிர்ந்துவில் வீசுவ
பைந்து கிற்கொடி கால்பொரப் பார்ப்பின
மந்த ரத்திடை யாடுவ போலுமே.
(இ-ள்.)
சுந்தரத்து -
அழகையுடைய,
திரள் -
கண்ணாடியாலாகிய அந்த துவஜ
ஸ்தம்பத்தில், சூடின -
பதிக்கப்பட்டனவாகிய, மா -
பெருமைபொருந்திய, மணி - இரத்தினங்கள், மின்பரப்பின் -
மின்னல் பரப்பைப்போல, மிளிர்ந்து
- பிரகாசித்து, வில் - கிரணங்களை,
வீசுவ - வீசுவனவாம்,
பைந்துகிற் கொடி - அந்த ஸ்தம்பத்தின் நுனியிலிரா
நின்ற அழகிய
துவஜக் கொடியை, கால்பொர - காற்றானது தாக்க (அக்கொடி
அசைகின்றதைப் பார்த்தால் அது), பார்ப்பினம் -
ஹம்ஸ பட்சியின்
கூட்டம், அந்தரத்திடை - ஆகாயத்தில்,
ஆடுவபோலும் - பறந்து
உலவுவதை நிகர்க்கும், எ-று. (64)
1112. காரின் மீதுல வுங்கத லிக்கொடி
தார்ம ணிகள் சலிப்ப
வொலிப்பன
வாரி மீது வரும்பரித் தேரிடைத்
தார்ம ணிகள் சலித்தொலி போலுமே.
(இ-ள்.) காரின் மீது - மேக மண்டலத்துக்கு மேலே, உலவும் -
ஆடுகின்ற, கதலிக்கொடி - இந்த
இந்திரத்துவஜக் கொடிச்
சீலையானது, சலிப்ப - காற்றினால்
அசைந்தாட, (அதனால்
துஜஸ்தம்பத்தில் கட்டியிருக்கப்பட்ட), தார்
மணிகள் -
முத்துமாலைகளும் மணிகளும், ஒலிப்பன - சப்திப்பவை, வாரிமீது -
(உதயகாலத்தில்) சமுத்திரத்தின்
மேல், வரும் - வருகின்ற,
(சூரியனுடைய), பரித்தேரிடை - குதிரைகள் பூட்டிய ரதத்திலிருக்கின்ற,
தார் - மாலைகளும், மணிகள் - மணிகளும்,
சலித்து - சலிக்க,
(அதனாலுண்டாகின்ற), ஒலி - ஒலியை, போலும் - நிகர்க்கும், எ-று.
(65)
1113. இந்த வான்கொடி யைக்கடந் தேகலும்
வந்து தோன்று மகோதய மண்டபஞ்
|