சுந்த ரம்மணித் தூணிரை யாயிரத்
தெந்தை கோயின் முகத்தி னிருந்ததே.
(இ-ள்.)
இந்த - இப்போது சொல்லப்பட்ட இந்த,
வான் -
பெரிதாகிய, கொடியை - துவஜக் கொடியை,
கடந்து - தாண்டி
(அப்புறத்தில்), ஏகலும் - செல்லலும், வந்து - அவ்விடத்தில் வந்து,
தோன்றும் - காணப்படும், மகோதய
மண்டபம் - மகோதய
மண்டபமானது, சுந்தரம் - அழகிய, மணி - இரத்தினங்களினாலாகிய,
தூணிரை ஆயிரத்து - ஆயிரம் தூண் சமூகங்களையுடையதாகி
(அதாவது : ஆயிரங்கால் மண்டபமாகி), எந்தை - ஸ்வாமியினுடைய,
கோயில் - ஆலயத்தின், முகத்தின் - அபிமுகத்திலே,
இருந்த -
இராநின்றது, எ-று. (66)
1114. மற்றிம் மண்டபத் துண்மணிப் பீடிகை
சொற்கி ழத்தி யிருக்கைச் சுதக்கடன்
முற்றும் வந்தொரு மூர்த்திக்கொண் டாலன்ன
பெற்றி யாலிருந் தாளை வலத்திரீஇ.
(இ-ள்.) மற்று
- பின்னை, இம்மண்டபத்துள் -
இந்த
மஹோதயமண்டபத்தில், மணி - ரத்தினத்தினாலாகிய,
பீடிகை -
பீடமானது, சொற்கிழத்தி - சரஸ்வதி
தேவியின், இருக்கை -
இருக்கையாகும், சுதக்கடல் - சுருதஞானமாகிற
சமுத்திரமானது,
முற்றும் - முழுமையும், வந்து -
இவ்விடத்தில் வந்து, ஒரு
மூர்த்திகாண்டாலன்ன -
ஒரு உருவமானதற்குச் சமானமாகிய,
பெற்றியால் - தன்மையினால், இருந்தாளை - நிறைந்திருந்தவளாகிய
அந்த சரஸ்வதி தேவியை, வலத்து - தனது வலப்பக்கத்தில்,
இரீஇ -
ஸ்தாபித்துக்கொண்டு (அதாவது : தான்
அதற்கிடப்பக்கத்தில்
சேர்ந்து), எ-று.
இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (67) 1115. சோர்வின் மாதவர் சூழ்சுத கேவலி
தார கைநடுச் சந்திரன் போல்பவன்
கார்ப யிர்க்குத வும்படி யாலுயிர்க்
கார்வ மின்றி யறத்தை யளிக்குமே.
(இ-ள்.) சோர்வில்
- தபசுகளில் நழுவுதலில்லாத, மாதவர் -
மஹா முனிவரர்கள், சூழ் - தன்னைச்சூழ்ந்திருக்கின்ற, சுதகேவலி -
ஒரு சுருதகேவலியானவன், தாரகை நடு
- தாராகணங்களின்
நடுவிலேயிருக்கின்ற, சந்திரன் போல்
பவன் - சந்திரனுக்குச்
சமானமாகியவனாய், கார் - மேகமானது, (மழை பெய்து), பயிர்க்கு -
சஸ்யங்களுக்கு, உதவும்படியால் - உதவுவதுபோல,
உயிர்க்கு -
பவ்விய
|