நீதி யாநிதிக் கோக்க ணிரந்தர
மீதல் மேவி யிருப்ப விரண்டுள.
(இ-ள்.)
(இன்னும்) போதறா - மலர்கள் நீங்காத (அதாவது :
புஷ்பங்களினால் அர்ச்சனைகள் பற்றறாமல் செய்யும்படியான), மணி
- ரத்தின நிருமிதமான, பீடத்தின் - அந்தப்
பலி பீடத்திற்கு,
அப்புறம் - அப்பால், (உட்சென்றால்), வாய்தல் வீதியை - வாயிலின்
வழியை, நோக்கிய - பார்த்துக்கொண்டிருக்கின்ற,
மண்டபம் -
அவ்வழியின் இரண்டு பக்கங்களிலும்
உள்ள மண்டபங்களில்,
நீதியால் - வரிசையினால், நிதிக்கோக்கள்
- நவநிதிகளுக்கு
அதிபர்களாகிய குபேரதேவர்கள், நிரந்தரம்
- இடைவிடாமல்,
ஈதல்மேவி - கொடுக்குந் தன்மையைப்
பொருந்தி, இருப்ப -
இருக்கப்பட்டவைகள், இரண்டுள - (மஹா வீதியினிருபக்கத்திலும்
பக்கத்துக் கொன்றாக) இரண்டு மண்டபங்கள் உள்ளன, எ-று. (71)
1119. பாட லோடு பயின்றிலை யம்பல
கூடி நீடு நிலாவொல்லை மின்னெனத்
தோடு மாடுவ வச்சுர தேவிய
ராடு நாடக சாலையப் பாலவே.
(இ-ள்.) (அப்பால்
அந்தக் கொடைக்கர மண்டபத்தைத்
தாண்டி வீதி வழியாகவே உட்சென்றால் அவ்விடத்தில்),
பாடலோடு
- பாட்டுக்களோடு, பயின்று - சேர்ந்து, இலையம்பல - மஹாலயம்
பலவும், கூடி - சேர்ந்து, (நர்த்தனத்துடனே), நீடு - பெரிதாகிய, நிலா
- சந்திரகிரணம் பொருந்திய, தோடும் - கர்ணத்தோடுகளும், ஆடுவ
- அசைந்தாடக் கூடியனவாகிய,
அச்சுரத்தேவியர் -
அந்தக்குபேரதேவர்களின் தேவிமார்கள்,
ஒல்லை - சீக்கிரத்தில்
தோன்றும், மின்னென - மின்னலைப்போல, ஆடும் -
நர்த்தனஞ்
செய்கின்ற, நாடகசாலை - நர்த்தனச்சாலைகள்,
அப்பால -
அந்தக்கொடைக்கர மண்டபத்திற்கப்பாலுள்ளனவாம், எ-று. (72)
1120. வெற்றி முற்ற விதிக்கினைத் தூபைக
ளுற்று நின்றன வோங்கியோ
ரோசனை
சுற்றும் வேறுள வேதிகை தோரணம்
வெற்றி வெண்கொடி மாலைய மேலெலாம்.
(இ-ள்.) (ஏழாம்
பிராகாரமாகிய அந்தக்கிரகாங்கண பூமியின்
மஹா வீதிகளில் உள்ள
சிறப்புக்கள் இதுவரையிலும்
சொல்லப்பட்டன. இனி அப்பிராகார
பூமியின் விதிக்குகளில்,
அதாவது கோணங்களில் உள்ளவற்றைச் சொல்வாம்), விதிக்கின் -
அப்பிரகார பூமியின் விதிக்குகளில் (அதாவது : கோணங்களில்), ஐ
- அழகிய, தூபைகள் - ஸ்தூபைகளானவை, ஓரோசனை
|