சமவசரணச்சருக்கம்529


Meru Mandirapuranam
 

 1123. வீத சோகமு மெய்ம்மை விளக்குமென்
      றோது நாமத்த வென்றினொன் றுள்ளவாங்
      காத பாத மகன்றுவில் லோங்கிமே
      லேத மில்வலங் கொள்வட்ட மிங்கிதே.

   (இ-ள்.)    மெய்ம்மை   -   யதாஸ்வரூபத்தை,   விளக்கும்  -
பிரகாசிக்கச்  செய்கின்ற,   வீதசோகமும்  - சோகமற்றதாகிய போதி
ஸ்தூபையும்,   என்றோதும்  -   என்று  சொல்லப்பட்ட,  நாமத்த -
நாமங்களையுடையனவாகிய இத்தூபைகள், ஒன்றினொன்றுள்ளவாம் -
அந்தஏழாம்  பிராகாரத்தின்   கோணங்களில்   மஹா   வீதிகளின்
ஓரத்திலிருந்து             வரிசையாக        வொன்றுக்கொன்று
அப்பியந்தரங்களிலாகாநின்றனவாம்,   இங்கிது  -  இங்கே    இந்த
ஸ்தூபைகள் உள்ள  இவ்விடமானது  சுற்றிலும்,  காதபாதமகன்று -
கால்காதம் அகலத்தையுடையதாகி, வில்லோங்கி - ஒரு வில்லுயர்ந்து,
மேல் - அதன்  மேலே,  ஏதமில்  -  குற்றமில்லாத,    வலங்கொள்
வட்டம் - வந்தவர்கள் பிரதக்ஷிணம் பண்ணுகின்ற  இடமாகும், எ-று. (76)

வேறு.

 1124. வானவர் கோன்மனத் தெண்ணிச் செய்தவன்
      றான்மிக வியப்புறுந் தரணி தன்மையை
      யானிவ ணுரைப்பதற் கெழுந்த மற்றிது
      வூனமே யாகிலு மொழிய வல்லனோ.

    (இ-ள்.)   வானவர்கோன் -  தேவேந்திரனானவன், மனத்து  -
தன்னுடைய   மனதில்,     எண்ணி    -    நினைத்து,   செய்து -
நிருமிதஞ்செய்து, அவன்தான் - அத்தேவேந்திரன், மிக - மிகுதியாக,
வியப்புறும் - ஆச்சரியப்படும்படியான,  தரணி  தன்மையை  - இந்த
சமவஸரணத்து சப்த பூமிகளின் ஸ்வரூபத்தை, யான் - நான்,  இவண்
- இவ்விடத்தில், (இப்படிப்பட்ட தன்மையுடையதென்று), உரைப்பதற்கு
- வர்ணிப்பதற்கு,   எழுந்த   -   உத்தேசித்த,   இது  -   இந்தத்
தன்மையானது,   ஊனமேயாகிலும்   -  சொல்ல   முடியாததாகிலும்,
மொழியவல்லன் - ஒரு விதத்தில் சொல்ல வல்லமையுடையவனாவேன்
(அதாவது : எனக்குத் தெரிந்தவரையில்  ஒரு விதத்தில் சொல்வேன்),
எ-று. (77)

 1125. கோசமுங் கோசமு மிரண்டு கோசமுங்
     கோசநான் கெட்டுமுந் நான்கீ ரெட்டுமாய்
     கோசமோர் பத்தொடே ழொன்று மும்மதிற்
     கோசமோ ராறுபோய்க் கோயி லெய்தினார்.