(இ-ள்.) கோசமுங்கோசமும்
- இரண்டு குரோச
விஸ்தீர்ணமுடைய பிராஸாத சைத்ய பூமியையும், இரண்டு கோசமும்
- இரண்டு குரோசவிஸ்தீர்ணமுடைய காதிகாபூமியையும், கோசநான்கு
- ஒரு காத அகலமுள்ள வல்லி
பூமியையும், எட்டு -
எட்டுக்குரோசம் (அதாவது : இரண்டுகாத விஸ்தீர்ணமான) உத்தியான
பூமியையும், முந்நான்கு - பன்னிரண்டு
குரோச விசாலமான
துவஜபூமியையும், ஈரெட்டு - பதினாறு குரோசமகன்ற கல்பகவிருட்ச
பூமியையும், ஆய் - ஆராயப்பட்ட, கோசமோர் பத்தோடு ஏழ் ஒன்று
- பதினெட்டுக் குரோச விசாலமான
கிரஹாங்கண பூமியையும்,
மும்மதில் - மூன்று மதில்களின் விசாலமாகிய,
கோசம் ஓராறு -
ஆறு குரோசமும், போய் - கடந்து சென்று (அதாவது :
இப்படி
அறுபத்தெட்டுக் குரோசவகலமான ஸப்த
பூமிகளையும் மும்
மதில்களையும் கடந்துபோய்), கோயில் - அதனப்பியந்தரத்திலுள்ள
ஸ்ரீநிலயமென்னும் ஆலயத்தை, எய்தினார் - மேருமந்தரரென்கிற
இருவர்களும் அடைந்தார்கள், எ-று. (78)
1126. கார்முக மொன்றுமே லொன்று பத்தோடேழ்
கார்முகங் குறைந்தமும் மதிலி னோக்கமுங்
கார்முக மீராயி ரமொன்று மாயபின்
னீர்மையா லுயர்ந்தன நிலங்க ளென்பவே.
(இ-ள்.)
ஒன்றுமேலொன்று - ஒன்றுக்கொன்று
மேலே
மேலேயாகிய, ஏழ்நிலங்கள் - (இந்தச்
சமவஸரணத்தின்) ஏழு
பூமிகளும், கார்முகம் பத்தோடு - ஒரு
பூமிக்கொரு பூமி பத்து
வில்லோடு கூடிய அளவாய், உயர்ந்தன
- உயர்ந்திராநின்றன,
மும்மதிலின் - மூன்று மதில்களுடைய, ஓக்கமும் - உன்னதத்தையும்,
கார்முகமும் - இப்படிவில் அளவினால், (சொல்லுமிடத்தில்),
குறைந்த
- பிரமாணத்தினால் தாழ்ந்திராநின்ற, ஒன்று -
முதல் மதிலாகிய
உதயதரமானது, ஈராயிரங்
கார்முகமாய - இரண்டாயிரம்
வில்லுன்னதமாகும், பின் - பிறகு உள்ள
இரண்டு மதில்களும்,
நீர்மையால் - முன்னமே அந்தந்த மதில்களைச்
சொன்ன இடத்தில்
சொல்லிய வரிசைக் கிரமத்தின்படி, உயர்ந்தன
- உயர்ந்தனவாம்
(அதாவது : இரண்டாவதாகிய பிரீதிதரமதில்
நாலாயிரம் வில்லும்,
மூன்றாவதாகிய கல்யாணதரமதில் ஆறாயிரம் வில்லுமாக
உயர்ந்திரா
நின்றன), என்ப - என்று அறிஞர் கூறுவர், எ-று.
உயர்ந்தன என்னும்
பதம் பூமிக்கும்
மதிலுக்குமாக
இரண்டிடத்திலும் கூட்டப்பட்டது. (79)
வேறு.
1127. வார்ம லிம்முலை மாதர் நடங்களும்
கார்ம லிக்கத லிக்கொடி யீட்டமுஞ்
|