சமவசரணச்சருக்கம்533


Meru Mandirapuranam
 

ஒசனை      மூன்றரையகன்றது     - (சப்த   பூமியும்     தாண்டி
மத்தியத்திலிருக்கப்பட்ட   ஸ்ரீ    நிலயமானது)   பதினாலு   காதம்
அகலத்தையுடையதாகும்,   ஓங்கியது   -  உன்னதமானது,   கீழ் -
அங்ஙனம்   பதினாலு   காதமகன்ற  அடியினின்றும்,  மேல் -  ஸ்ரீ
நிலயத்தின்   கோபுரசிகரபரியந்தம்,  ஓசனை நான்கு கோசமைந்து -
நாலு  யோஜனையும்  ஐந்து  குரோசமும்,  ஓங்கியது - உயர்ந்ததாம்,
பத்து     -   பத்துமாற்றாகிய,   பொன்   -   ஸ்வர்ணத்தினாலும்,
ஈரெட்டுமாசிலா  -   பதினாறு   தோஷநீங்கின,   மணியினால்  -
இரத்தினங்களினாலும்,         (நிருமிதமாகி),      ஆசைபோல் -
ஆசையைப்போல்,   (அளவில்லாமல்),  பரந்த  -  விசாலித்த,  வில்
அவயவத்ததாம் - கிரண சமூகங்களையுடையதாகும், எ-று. (85)

 1133. தலந்தன்மேற் சகதிகண் மூன்று தம்மிசை
      யிலங்குபட் டிகையுமைஞ் ஞூறு விற்களை
      விலங்ககன் றுயர்ந்தன வேறு வேறொளி
      மலர்ந்துவிற் பயின்றுவச் சிரம யங்களாம்.

   (இ-ள்.)   தலந்தன் மேல் - அந்தப் பதினாலு காதவகலமுடைய
பூமியின் மேல், சகதிகள்  மூன்று - மூன்று ஜகதீ தலங்கள், தம்மிசை
-  ஒன்றுக்கொன்று  தங்கள்  மேலே,  இலங்கும் -  விளங்காநின்ற,
பட்டிகையும்  -  மேகலைகள்   போல  சூழப்பட்டனவாயும்,  வேறு
வேறு - தனித்தனியாக,  (ஒவ்வொரு ஜகதியும்),  அஞ்ஞூறு விற்கள் -
ஐஞ்ஞூறு  விற்களின்   அளவு,   விலங்ககன்று  -   ஒவ்வொன்றும்
இடைவிட்டு     விசாலித்து,    உயர்ந்தன     -    யோக்கியமான
உன்னதத்தையுடையனவாயும்,    ஒளிமலர்ந்து   -   பிரகாசத்தினால்
விசாலித்து, வில்   -   கிரணங்களை, பயின்று - நீங்காமல் சேர்ந்து,
வச்சிரமயங்கள் -  வஜ்ராத்ன மயங்களாக, ஆம் - விளங்குவனவாம்,
எ-று. (86)

 1134. மார்பள வுயர்ந்தபொன் வரண்ட கத்தின்மேற்
     கார்முகஞ் சகதியின் கதலி கட்கிடை
     பாரவிற் பத்திடை கூடங் கோட்டக
     நீர்மையாற் றனுமுப்ப திரட்டி நீண்டவே.

   (இ-ள்.)  சகதியின்  -  அந்த  ஜகதீ  தலங்களில்,  மார்பளவு -
மார்பளவாய்,  உயர்ந்த  - உயர்ந்திராநின்ற, மேல் - மண்டபங்களின்
மேல் விளிம்புகளில்,  (இராநின்ற), பொன் - அழகிய, வரண்டகத்தின்
கதலிகட்கு - வரண்டகத்  துவஜங்களுக்கு, இடை - நடுவில்,கார்முகம்
- ஒரு வில் பிரமாணமாம்,  (அதாவது : அவை ஒரு வில் பிரமாணம்
இடை விட்டு ஒவ்வொன்றாயிருக்கும்), (இன்னும்  அம்மண்டபங்களின்
மேலே),    பாரம்   -   பெரிதாகிய,    வில்பத்திடை   -   பத்து
வில்லிடையையுடைய,  (அதாவது :   பத்துவில்லளவு   இடைவிட்ட),
கூடம் - கூடங்களும், கோட்