ஆகாயத்தில், எழுந்து
- கிளம்பி, திக்கை - ஸ்ரீநிலயக்கோயிலின்
எத்திக்குகளிலும், நின்று - வியாபித்து நின்று, பரிமளமாக்கும் -
வாசனையை நிரப்பா நின்றனவாகும், எ-று.
தம் - சாரியை. திக்கை -
உருபுமயக்கம். . (119)
1167. வீதிக ளகன்று காதம் வேதிகை யிரண்ட வாகு
மோதிய கும்பத் திப்பா லொன்பது தூபை
நிற்கும்
நீதியாற் றோர ணம்பத் தவற்றிடை
நின்ற வப்பாற்
போதொடு பலிக ளேந்தும்
பொன்செய்பீ டங்க ளாமே.
(இ-ள்.)
வீதிகள் - (அந்த
வாசற்படியினுள்ளேயும்
அதனப்பியந்தரத்திலும்) மஹாவீதிகள், காதம்
அகன்று - ஒருகாதம்
அகலமாகி, வேதிகையிரண்டவாகும் - (வீதியையும்
கோணபூமியையும்
வேறுபடுத்துவதற்கு வீதியினிருபக்கத்திலும்)
இரண்டு
வேதிகளையுடையன வாகும், ஓதிய - (வீதிவழியில்
வாசற்படியின்
உட்புறத்துமுன்) சொல்லப்பட்ட, கும்பத்து -
தூபகலசமிருக்கும்
மேடைக்கு, இப்பால் - அப்பியந்தர
பாகத்தில், (வீதியிலேயே),
ஒன்பது தூபை - ஒன்பது
ஸ்தூபைகளானவை, நிற்கும் -
ஒன்றின்முன்னொன்றாக வரிசையாய்
நிற்கும், நீதியால் -
வரிசையினால், தோரணம் பத்து - பத்துத்தோரணங்கள்,
அவற்றிடை
- அத்தூபைகளை மத்தியவர்த்தியாகச்செய்து,
நின்ற - இராநின்றன,
அப்பால் - அதற்கும் உள்ளே, (அவ்வீதிவழியில்),
போதொடு -
புஷ்பங்களோடு, பலிகள் -
பலிபிண்டங்களை, ஏந்தும் -
தரிக்கும்படியான, பொன்செய் - பொன்னாற் செய்யப்பட்ட,
பீடங்கள்
- (நாலு வீதிக்கும் வீதிக்கொன்றாக நாலு) பீடங்கள், ஆம் - ஆகும்.
எ-று. (120)
1168. கோசமூ வைந்திற் கந்த குடியினைச் சூழ வந்து
மாசிலாப் படிக பித்தி மார்பள வுயர்ந்தீ ரெட்டா
லாசைபோ னிறைவி லாத நிலங்கள்பன் னிரண்ட வாகி
யீசன்மா கணங்க ளீரா றிருக்கைதா னிருக்கு மாறே. (இ-ள்.)
கோசமூவைந்தில் - பதினைந்து குரோசங்களால்,
கந்தகுடியினை - கந்தகுடி மண்டபத்தை,
சூழவந்து - சுற்றிவந்து,
மாசிலா - களங்கமில்லாத, படிகபித்தி
- ஸ்படிகச்சுவர்கள்,
மார்பளவுயர்ந்து - மார்பளவுன்னதமாகி,
ஈரெட்டால் - பதினாறு
சுவர்களாலான, ஆசைபோல் - ஆசையைப்போல, நிறைவிலாத -
எவ்வளவு வந்து சேர்ந்தாலும்
நிரம்புதலில்லாத, நிலங்கள்
பன்னிரண்டவாகி - த்வாதச
கோஷ்ட பூமிகளாகி, ஈசன் -
ஜினேந்திரனுடைய, மா - பெருமைபொருந்திய, கணங்கள் ஈராறு -
த்வாதச கணங்கள், இருக்குமாறு - இருக்குபடியான, இருக்கை -
ஸ்தானங்கள், தான் - இவைகள்தானாகும், எ-று.
|