வைசயந்தன் முத்திச்சருக்கம் 55


Meru Mandirapuranam
 

கள்,  கடக்க  எண்ணும்  -  நீங்கிச்செல்ல  நினைக்கும், மாற்றிது -
மாற்றமாகிய இந்த ஸம்ஸார சுழற்சியானது, குற்றமோர் மூன்று - (ராக,
த்வேஷ,  மோஹமென்னும்)  முக்குற்றங்களால்,  நான்குகதிகளில்   -
சதுர்க்கதிகளில்,  பொறிகளைந்தில் - பஞ்ச இந்திரியங்களில், பற்றிய -
சேர்ந்த,  காயம் ஆறில் - (பிருத்வி, அப்பு, தேயு, வாயு, வனஸ்பதி,
த்ரஸ,    காயமென்னும்)    ஷட்சீவ    நிகாயங்களில்,  பழவினைத்
திரிவோரேழில் - சப்த பரிவர்த்தனைகளில், சுற்றிய - சேர்ந்திராநின்ற,
வினைகளெட்டில்  -  அஷ்ட கர்மங்களில்,  தோற்றிய - உண்டாகிய,
சுழற்சி  -  சுழற்சியாகும்,  எ-று.

     பஞ்சபரிவர்த்தனைகளோடு ரூபம், நாமம் என இரண்டு சேர்ந்து
எழு  பரிவர்த்தனைகளாகும்;  இதன் விவரம் பதார்த்தசாரம்,  அஷ்ட
பதார்த்தம் முதலிய கிரந்தங்களில் தெளிவாகக் காணப்படும்.கண்டாய்
- அசை.                                              (114)

 115. எழுகயி றகன்று மீரேழ் கயிறுயர்ந் திடையி லொன்றாய்
    முழவென விடையி லைந்தாய் முடியொன்றா யடியி லேழா
    யழிவிலா வுலகிற் றோற்ற மனந்தமாம் படிப்ப தேச
    மெழுவெனத்  திரண்ட தோளா யிறந்தநாட் பிறந்த வென்றான்.

    (இ-ள்.)  எழுவென- ஸ்தம்பம்போல்,  திரண்ட  - திரட்சிபெற்ற,
தோளாய் -     புயத்தையுடைய    குமாரனே!,    எழுகயிறகன்று -
(உத்தரதக்ஷிண  வியாஸமானது)  சப்தரஜ்ஜு ப்பிரமாணமாகி,  ஈரேழ்
கயிறுயர்ந்து  -  பதினாலுகயிறுன்னதமாகி,  இடையில்  - உயரத்தின்
பாதியாகிய மத்தியமலோகத்தில், ஒன்றாய் - (பூர்வாபரவியாஸம்) ஒரு
ரஜ்ஜு வாகி, முழவென - (இதற்குமேல்) மத்தளம்போன்ற, இடையில்-
ஊர்த்துவலோக    மத்தியமாகிய    விடத்தில்  (அதாவது  மத்திம
லோகத்தினின்றும் மூன்றரைக்கயிறுயர்ந்த  பிரம்ம  கல்பத்துச்சியில்),
ஐந்தாய்  -  (பூர்வாபரவியாஸம்)  பஞ்சரஜ்ஜு வாகி,  முடி  - அந்த
லோகத்தினுடைய  உச்சியில்,  (பூர்வாபரவியாஸம்)  ஒன்றாய் - ஒரு
கயிறாகி,  அடியில்  -  அதோலோகத்தின்  அடியிலே,  ஏழாய்  -
(பூர்வாபரவிஸம்)  ஏழுகயிறாகி, படிப்பதேசம் - (இந்தக் கணக்கினால்
முந்நூற்று           நாற்பத்துமூன்று       ரஜ்ஜு ப்ரமாணமாகிய)
லோகப்ரதேசமென்னும், அழிவில்லா - கெடாத,  உலகின்தோற்றம் -
இந்த  வுலகத்தினுடைய  தோற்றத்தில், இறந்தநாள் - நாம் சரீரத்தை
விடுத்தநாள்களும், பிறந்தநாள் - வேறொரு சரீரத்தை எடுத்துப்பிறந்த
நாள்களும்,   அனந்தமாம்  -  எண்ணிலவாம்,  என்றான்  - என்று
வைஜயந்தன் சொன்னான், எ-று.

         நாள் இரண்டிடத்துங் கூட்டப்பட்டது. (115)

 116. என்பினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப்
    புன்புறந் தோலின் மூடி யழுக்கொடு புழுக்கள் சோரு
    மொன்பது வாயிற் றாய வூன்பயில் குரம்பை தன்மே
    லன்பறா மாந்தர் கண்டா யறிவினாற் சிறிய நீரார்.