554மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

யுடைய   பகவனுடைய,    கந்த  குடிய  மாளிகை   -    கந்தகுடி
மாளிகையானது, இதாம் - இத்தன்மையுடையதாகும், எ-று. (131)

வேறு.

 1179. குடதிசைக் கொடிநிறை பீடத் தின்மிசை
      யடிநிலாய்ப் பிண்டிவில் லறுப தோங்கிமேற்
      கடியுலா மலர்மிடை கவடு கந்தமா
      குடியினைச் சூழ்ந்துபோய்க் குலாவி நின்றதே.

   (இ-ள்.)   கொடிநிறை -  த்வஜங்களினால்  நிறைந்த,  பீடத்தின்
மிசை - த்வீதிய பீடமான த்வஜ பீடத்தின் மேலே, குடதிசை - மேல்
பக்கத்தில், அடி -  அடியானது,  நிலாய்  -  நிலைபெற்று, பிண்டி -
அசோக விருட்சமானது,   வில்லறுபது -  அறுபது  வில்லு, ஓங்கி -
உன்னதமாகிய அடித்திரள் ஸ்தம்பமாகி, மேல் - அதற்கு மேலே, கடி
- வாசனையானது,     உலாம்    -  வியாபித்திராநின்ற,    மலர் -
புஷ்பங்களினால்,    மிடை   -    நெருங்கியதாகிய,      கவடு -
கிளைகளானவை,  கந்தமா  குடியினை  -  கந்தகுடி   மண்டபத்தை,
சூழ்ந்து  போய் - சூழப்பட்டதாகிப்போய்,  குலாவி  -   பிரகாசித்து,
நின்றது - நிலைபெற்றுளது, எ-று. (132)

 1180. முத்தமா மணிமுதன் மாலை தாழ்ந்து பூந்
     தொத்துமேற் றதைந்நதன சுரும்பு வண்டுதேன்
     றத்தியின் பிரசமுண் டெழுவ தம்மொலி
     மொய்த்தலாற் கடன்முகின் முழக்க மொக்குமே.

     (இ-ள்.)   முத்தமா  மணிமுதல் -  முத்து   சிறந்த ரத்தினம்
ஆகியவற்றாலாகிய மாலைகள் முதலாக, மாலை - பலவிதமான புஷ்ப
மாலைகளும்,      தாழ்ந்து   -   அந்த   அசோக   விருட்சத்தில்
அலங்கிருதமாகத்   தொங்கி,   பூந்தொத்து - புஷ்பக்கொத்துகளும்,
மேல் - மேலெங்கும்,   ததைந்தன - நெருங்கி நிறைந்தன, சுரும்பு -
சுரும்பினங்களும்,  வண்டு  -  வண்டினங்களும்,  தேன்  -   தேன்
கூட்டங்களும், தத்தி -  அப்புஷ்பக்  கொத்துகளில் பாய்ந்து, இன் -
இனிமையாகிய,  பிரசம்  -  மதுவை,  உண்டு  -  குடித்து, எழுவ -
எழும்பிப்  பறக்கின்றனவாம்,  தம்மொலி -  அவைகளின் சப்தங்கள்,
மொய்த்தலால் - நெருங்கி முழங்குவதால், கடல் - சமுத்திரத்தினதும்,
முகில் - மேகத்தினதும்,   முழக்கம் -    கர்ஜனையை,   ஒக்கும் -
ஒத்திருக்கும், எ-று. (133)

 1181. தருவலி தலநல தடத்தின் மீதெலா
     விருதுவு மலர்மல ருட னலர்ந்திலை