சமவசரணச்சருக்கம்555


Meru Mandirapuranam
 

    மரகத மணிகளாய் முறிகள் வான்றளி
    ரருமணி யாலின் றசோக நின்றதே.

   (இ-ள்.)   தரு -  அவ்வசோக   மரத்தின்,   வலி   -   பலம்
பொருந்திய,  தலம்  -   பெரிதாகிய, நலம் - அழகுள்ள, தடத்தின் -
கிளைகளினது,  மீது  -  மேலே,    எலாவிருதுவும்  -   ஷட்ருதுக்
காலங்களிலும், மலர் -   புஷ்பிக்கும்படியான,  மலர் - புஷ்பங்களை,
உடன் - ஒரு தன்மையாக,  அலர்ந்து - மலர்ந்து, இலை - இலைகள்,
மரகத மணிகளாய் - பச்சை  ரத்தினங்களால்  செய்தனவாகி, வான் -
அழகிய, முறிகள்  பெருந்துளிர்களும்,  தளிர்  -  சிறு  துளிர்களும்,
அரும் - அரிதாகிய, மணியால் - பத்மராகரத்தினத்தினால், இயன்று -
பொருந்தியதாய், அசோகம் - அந்த அசோக விருட்சமானது, நின்றது
- இவ்விதமாக நிர்மிதமாகி யிரா நின்றது, எ-று. (134)

 1182. முத்தம்வாய்ச் செறிந்தன நிறைந்த மும்மதி
     யொத்துமூ வுலகினுக் கிறைமை யோதுவ
     பத்தியிற் குயின்றது நிலாவி ரிந்துமேற்
     சித்திமா வேந்தைமுக் கவிகை சேர்ந்தவே.

    (இ-ள்.)   முத்தம் - முத்து மாலைகளை, வாய் - விளிம்புகளில்,
(சூழ), செறிந்தன - சேர்ந்திராநின்றனவாகி, நிறைந்த - நிறைவு பெற்ற,
மும்மதி -  மூன்று  சந்திரனை,  பத்தியில்  - ஒன்றின்மேலொன்றாக
வரிசை பெற,  குயின்றது  -  செய்து வைத்ததற்கு, ஒத்து - ஒப்பாகி,
மூவுலகினுக்கு  -   இந்த   மூன்று   லோகத்திற்கும்,   இறைமை -
எஜமானத்துவத்தை, ஓதுவ -  சொல்வனவாகி,  நிலா - கிரணமானது,
விரிந்து -  விசாலித்து,   மேல்  -   மேலே,  சித்தி  மாவேந்தை -
ஸித்தியடையும்படியாகிய     ஜினேந்திரனை,       முக்கவிகை  -
சத்திரத்திரயமானது,  சேர்ந்த -   அடைந்து  நிழற்றப்பெற்றன, எ-று. (135)

1183. புண்டரீ கத்தொடு புணர்ந்த சாயைபோற்
    பிண்டியின் கொழுநிழற் பிரம மூர்த்திபின்
    மண்டலம் மலரடி வணங்கிப் பின்றனைக்
    கண்டவர்ப் பிறவியேழ் காண நின்றதே.

   (இ-ள்.)  பிண்டியின் -   அந்த   அசோக  விருட்சத்தினுடைய,
கொழுநிழல் - செழுமை  பெற்ற  நிழலிலே,  பிரம  மூர்த்தி  பின் -
ஸ்வாமியின்    பின்னாலே,  புண்டரீகத்தொடு   -  (ஸ்வாமியானவர்
இராநின்ற) செந்தாமரைப் புஷ்பத்தோடு,  புணர்ந்த - சேர்ந்திராநின்ற,
சாயை போல்    -    ஜோதிக்கு    ஒப்பானதாக,    மண்டலம் -
பிரபாமண்டலமானது,   மலரடிவணங்கி   -  ஜினேந்திரனுடைய பாத
தாமரையை