558மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)  (அந்த    கரங்கள் முன் குவிந்த - சுவாமியைக்கண்ட
காலத்தில்    இவர்களுடைய    கைகள்    முன்னே    குவிந்தன,
உள்ளக்கமலங்கள்  -  இருதய  கமலங்கள்,  விரிந்து -    மலர்ந்து,
கண்ணீர் - ஆனந்தக்கண்ணீர்த்துளிகள்,சொரிந்தன -   சொரிவுற்றன,
ரோமம் -   சரீர  மயிர்களில்,  புளகங்கள்  பரந்த -  சிலிர்ப்புக்கள்
உண்டாயின,    வாய்ச்சொல்    -    வசனங்கள்,      அரிந்தன -
குழறப்பட்டனவாகி,  துடித்த - துடித்த, காதல் - ஸ்வாமி பக்தியாகிற
ஆசையானது, சுரந்த - மிகுந்தது, அடி - பாதங்கள், முறையிடுதல் -
அதற்குமேல் கிரமமாகப் பெயர்த்து வைத்தல், ஓய்ந்தன - ஓய்வுற்றன,
(அப்போது), இரவிமுன் -ஸூர்யனுடைய எதிரில், (உண்டாம்), இருளை
யொத்து - அந்தகாரத்தை நிகர்த்து   (அதாவது :    இருளில்லாமல்
நீங்கிவிடுவது    போல),  வினைகளெல்லாம் -   கர்மங்களெல்லாம்,
இரிந்தன - கெட்டு நீங்கின, எ-று. (141)

 1189. தும்பமார் நேமி ஞான காட்சிநல் லொழுக்க மாய
     சம்பவன் முன்பு நின்ற தருமசக் கரத்தி னும்பர்
     மைந்தரா னவர்க ளேறி வலங்கொண்டர்ச் சனையின் முற்றித்
     தும்பிபோற் பணிந்தெ ழுந்து வாழ்த்துபு தொடங்கி னாரே.

   (இ-ள்.)   தும்பம்   -   பிரகாசம்,  ஆர் -  நிறைந்த,  நேமி -
ஸமவஸரண மண்டலத்திலிராநின்ற,  ஞானக்காட்சி நல்லொழுக்கமாய
- க்ஷாயிக  ஞான தர்சன  சாரித்திரமாகிய,  சம்பவன் -  ஆத்மகுண
ஸ்வபாவஸம்பவனாகிய பரமாத்ம ஸ்வரூபமடைந்த ஜினேந்திரனுடைய,
முன்பு - எதிரிலே, நின்ற - நிலை பெற்ற, தருமசக்கரத்தின் உம்பர் -
தர்மசக்கரம் இராநின்ற சக்கர  பீடமாகிய  பிரதம  பீடத்தின் மேலே,
மைந்தரானவர்கள் - மேருமந்தரரென்கிற  இவ்விருவர்களும்,  ஏறி -
ஏறி, வலங் கொண்டு - பிரதக்ஷணமாக வந்து, அர்ச்சனையின் முற்றி
- அஷ்டவிதார்ச்சனைகளைச்  செய்து   முடித்து,   தும்பி  போல் -
யானையானது படிந்து படுப்பது போல,  பணிந்து  - சாஷ்டாங்கமாக
வணங்கி,  எழுந்து -  எழுந்து   நின்று,    வாழ்த்துபு    -  ஸ்துதி
சொல்வதற்கு, தொடங்கினார் - ஆரம்பித்தார்கள், எ-று. (142)

வேறு.

 1190. காமாதி கடந்ததுவுங் கைவலப்பெண்
         ணடைந்ததுவுங் கமலப் போதிற்
     பூமாரி பொழியவெழுந் தருளியதும்
         பொன்னெயின்மண் டலத்த சோகந்
     தேமாரி மலர்பொழியச் சீயவணை
         யமர்ந்ததுவுந் தேவர் கோமான்
     றாமாதி யணிந்துபணிந் தெழுந்ததுவுந்
         தத்துவமென் றகவோ வென்ன.