நிர்க்கந்த ரூபமாகிற
ஜினதீக்ஷையை, அருளு - தயவுடன் அளிக்கக்
கடவாய், வாழிநீ - நீ வாழக்கடவாய்,
என்று - என்று சொல்லி,
இறைஞ்சிடா - வணங்கி, எ-று.
தெப்பை, நீண்டது. இதுவும் அடுத்து
செய்யுளும் குளகம். (154)
1202. முடிகளுங் கடகமு முத்தின் பூண்களுங்
கடிமிசைக் காஞ்சியு நாணு
மாடையும்
வடிவுடைத் தடக்கையால் வாங்கி
விட்டவை
விடுசுடர் விளக்கின்முன் னிமைத்து வீழ்ந்தவே.
(இ-ள்.)
முடிகளும் - கிரீடங்களும், கடகமும்
- அஸ்த
கங்கணங்களும், முத்தின் பூண்களும்
- முத்தாபரணங்களும்,
கடிமிசை - அரையின்மேலணியும்
படியான, காஞ்சியும் -
மேகலாபரணமும், நாணும் - அரைநாண்கயிறும்,
ஆடையும் -
வஸ்திரங்களும், வடிவுடை - ரூபம் பொருந்திய, தடக்கையால் -
விசாலித்த தங்களுடைய கைகளால்,
வாங்கிவிட்டு - நீக்கிவிட,
அவை - அவ்வாபரணாதிகள், விளக்கின்முன்
- தீபத்தினுடைய
எதிரில், விடு - விளக்கினின்றும் விழுகின்ற, சுடர் - தீபச்சுடர்போல,
இமைத்து - விளங்கி, வீழ்ந்த - வீழ்ந்தன, எ-று. (155) 1203. குறுநெறி பயன்றெழு குஞ்சி
யஞ்சொலார்
நெறிமையை யறநெறி நினைப்ப
நீக்குமென்
றறிவன தடிமுத லைம்ப தஞ்சொலா
நெறிமையி னீக்கினார் நீண்ட
தோளினார்.
(இ-ள்.) நீண்ட -
நீட்சியுடைய, தோளினார் - கைகளையுடைய
இவ்விருவரும், அஞ்சொலார்
- அழகிய சொல்லையுடைய
ஸ்த்ரீமார்களால், குறுநெறி பயின்று - வகுப்பெடுத்து வார்தல் முதலிய
சிறு வழிப்பாடுகளை யடைந்து, எழும் - வளர்ந்திராநின்ற, குஞ்சி -
தலையின் மயிரினது, நெறிமையை - வழிப்பாடாகிய போற்றுகையை,
நினைப்ப - எண்ண, அறநெறி - ஜின தர்மத்தின்
வழியாகிய
ஸம்மியக்தர்சன ஞான சாரித்திரங்களை,
நீக்குமென்று - விலக்கி
மித்தியாத்துவ மயக்கத்தைச் செய்து விடுமென்று பாவித்து, அறிவனது
- அருகபரமனது, அடி முதல் - பாதமுதலாக, ஐம்பதம் -
1பஞ்ச
பரமேஷ்டிகளுடைய பதத்தை, சொலா - உச்சரித்து, நெறிமையின் -
2ஜினதீக்ஷா விதிமுறையின்படி, நீக்கினார் - (அவ்வுரோமத்தை)
பரிஹரித்து விட்டார்கள், எ-று.
1பஞ்ச
பரமேஷ்டிகளின் ஸ்வரூபங்களையும்
பாவனையின்
லக்ஷணங்களையும் பதார்த்த சாரத்தில்
முப்பதாவது அதிகாரத்தில்
கண்டு கொள்க.
2ஜினதீக்ஷையின் விதி
முறைகளை ஆசாராங்கமென்னும்
புஸ்தகத்தில் யதியாசாரமென்னும் பகுதியில்
பார்த்துத்
தெரிந்துகொள்க. (156) |