568மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

போதியாறு - ஆறுவிதமாகிய புத்திரித்தியும், ஐந்துமாமருந்து - ஐந்து
விதமாகிய  ஒளஷதரித்தியும்,  மாதவம் - பெரிதாகிய தபோரித்தியும்,
நீதியால்  -  வரிசையினாலே, நாற்சுவை - நாலுவிதமான ரஸரித்தியும்,
வலிகள்  மூன்று  -  த்ரிப்பிரகாரமான   பெலரித்தியும்,   இரண்டு -
இரண்டு     விதமாகிய,    குறைபடாவுறையுள்    -      அக்ஷீண
மஹாலயத்துவமும்,  ஊண்  - அக்ஷீண மஹாசனத்துவமு மென்னும்
அக்ஷீணரித்தியும், ஆதியாம் - முதலாகியவைகளாம், எ-று.

     இந்தரித்திகளின் விவரங்களை பதார்த்த ஸாரத்தில் முப்பதாவது
அதிகாரத்தில் பார்த்துக்கொள்க. (159)

 1207. துவர்ப்பசை நான்கொடு தொடர்ந்த பத்துமா
      சுவர்ப்புநீ ரார்கழீஇ யுள்ளந் தூயமா
      தவத்தவர் புறப்பத்து மாசு தன்னையு
      முவத்தல்காய் விலாமையா லொருவி னார்களே.

   (இ-ள்.)   துவர்ப்பசை  நான்கொடு  -  குரோத  மான   மாயா
லோபமென்னும் சதுஷ்கஷாயத்தோடு, தொடர்ந்த - சேர்ந்திரா நின்ற,
பத்துமாசு -  (மித்தியாத்துவம்,    நபும்ஸகவேதம்,     ஸ்த்ரீவேதம்,
புருஷவேதம்,  ஹாஸ்யை,  ரதி,  அரதி,  சோகம்,  பயம், ஜுகுப்ஸை
என்னும்) பத்துக் களங்கங்களும், (சேர்ந்து பதினாலாகிய அப்பியந்தர
பரிக்கிரகங்களை),   உவர்ப்பு   -  வைராக்கியமென்கிற,   நீரால் -
ஜலத்தினால்,  கழீஇ -  பரிஹரித்து,  உள்ளம்  -  மனதில்,  தூய -
பரிசுத்தமாகிய,  மா  -  பெரிதாகிய,  தவத்தவர்  -  தபத்தையுடைய
இவ்விருவர்களும்,  புறப்பத்து  மாசு  தன்னையும்  -   (க்ஷேத்திரம்,
வாஸ்து, ஹிரண்யம்,  ஸ்வர்ணம்,  தனம்,  தானியம்,  தாஸீ,  தாஸன்,
குப்பியம்,  பாண்டம்,  என்னும்  பாஹ்ய  பரிக்கிரகம்)   பத்தையும்,
உவத்தல் - சந்தோஷித்தலும், காய்வு - த்வேஷித்தலும், இலாமையால்
- இல்லாத விதத்தினாலே,  ஒருவினார்கள் - விட்டார்கள் (அதாவது :
நிஷ்பரிக்கிரகர்களானார்கள்), எ-று.

    இங்ஙனம் கூறியதனால், ஸர்வஸங்கபரித்தியாகம் பண்ணினார்கள்
என்பது பெறப்படும். (160)

 1208. ஒழுக்கநீர் குளித்துடுத் தம்ப ரத்தினை
      வழுக்கிலா மாதவச் சாந்து மட்டியா
      விழுக்குண மணியணி மேனி சேர்த்தினார்
      தொழிற்றொடை சீலமா மாலை சூடினார்.

   (இ-ள்.)  ஒழுக்கநீர்  -   நல்லொழுக்கமென்னும்   ஜலத்தினால்,
குளித்து  -   ஸ்நானஞ்செய்து,   அம்பரத்தினை  -  ஆகாசத்தினை,
உடுத்து  -  உடுத்திக்கொண்டு,   வழுக்கிலா  -    நழுவுதலில்லாத,
மாதவச்சாந்து - மஹாதபமாகிற சந்தனத்தை,