மட்டியா - பூசி, விழு - பெரிதாகிய, குணமணி - ஸம்மியக் ஞானாதி
குணங்களாகிய ரத்தினாபரணங்களை, மேனி
- சரீரங்களில்,
சேர்த்தினார் - அணிந்தவர்களாகி, தொழில் தொடை -
எல்லையாகச்
சேர்ந்த தொழிலென்னும், சீலமாலை -
சீலாச்சாரமென்னும்
பூமாலைகளையும், சூடினார் - (அவர்கள்) அணிந்துகொண்டார்கள்,
எ-று. (161)
1209. விதிமனர் தமைவெல வந்த கேவலத்
ததிபதி தனக்கிள வரச ராக
நற்
சுதமலி கேவல பட்டஞ் சூடினார்
விதியினா லிறைவனை வந்தி
றைஞ்சினார்.
(இ-ள்.)
விதிமனர் தமை - கருமங்களாகிற
அரசர்களை
யெல்லாம், வெல - ஜயிக்க, வந்த - வரப்பட்ட, கேவலத்து - கேவல
ஞானத்தையுடைய, அதிபதி தனக்கு - ஜினேந்திரனுக்கு, இளவரசராக
- யுவராஜபத முடையவர்களாக, நல் -
நன்மையான, சுதமலி
ஸ்ரீதஞான ஸம்பூர்ணமாகிய, கேவலபட்டம்
- சுருத கேவலி
பட்டத்தை, சூடினார் - அணிந்தவர்களாகி,
விதியினால் -
கிரமத்தினால், வந்து - ஸ்வாமியின் அபிமுகமாக வந்து, இறைவனை
- ஜினேந்திரனாகிய நாதனை, இறைஞ்சினார் -
வணங்கினார்கள், எ-று. (162)
1210. இறைவநின் னடியடை யுலகி யற்கையும்
பெறுபொரு ளளவையும் பிழைத்த
நீதியும்
மறவினை மனமிக வருதற் கேதுவும்
பிறவியின் விகற்பமும் வீட்டின்
பெற்றியும்.
(இ-ள்.) (அவ்வாறு
வணங்கியவர்கள்), இறைவ - ஸ்வாமியே!,
நின் - உன்னுடைய, அடி - பாதத்திலே, அடை - அடைகின்ற,
உலகு - லோகத்தினுடைய, இயற்கையும் -
ஸ்வரூபமும், பெறு -
அவ்வுலகத்திலடைந் திராநின்ற, பொருள் - ஜீவாதி பொருள்களின்,
அளவையும் - அவற்றைப்
பிரமாணித்து அறியும்படியான
ஞானப்பிரமாணமும், பிழைத்த
நீதியும் -
அதற்கு
மாறாகியமித்தியாமார்க்கமும், மறவினை - பாபவினைகள், மனம் -
மனோ பரிணாமத்தால், மிக - மிகுதியாக, வருதற்கு -
ஆத்மனிடம்
வந்து சேர்ந்து பந்திப்பதற்கு,
ஏதுவும் - காரணமாகிய
பரிணாமத்தையும், பிறவியின் - ஸம்ஸாரத்தினது, விகற்பமும் -
பிறப்பு
விகற்பங்களையும், வீட்டின் -
மோக்ஷத்தின், பெற்றியும் -
பெருமையையும், எ-று. (163)
1211. அருளென விறைஞ்சலு மணிக்1கட் டின்புற
முரசுநின் றதிர்வதி னெழுந்து
கேவலத்
|