திருவிடு தூதிபோல் செஞ்2சொல் வல்லிதான்
மருவினாண் முனிவர்தம் மனத்த கத்தையே.
(இ-ள்.)
அருளென - ங்களுக்கு
அருளிச் செய்ய
வேண்டுமென்று, இறைஞ்சலும் - மேலும் வணங்கவும், அணி -
அழகிய, கட்டு - (மேளக்கட்டாகும்படி
வாரினால் விகிந்து
கட்டப்பட்ட) கட்டையுடைய, முரசு - பேரிகையானது,
இன்புற -
கேட்பவர் இனிமையடையும்படி, நின்று
- தளராமல் நின்று,
அதிர்வதின் - சப்திப்பதுபோல, எழுந்து
- திவ்யத்வனியானது
உண்டாகி, கேவலத்திருவிடும் - கேவலஞானமாகிய
லக்ஷ்மியால்
அனுப்பப்பட்ட, தூதிபோல் -
தூதுசெல்பவள்போல, செம் -
செவ்விதாகிய, சொல்வல்லிதான் - ஸரஸ்வதி தேவியானவள், முனிவர்
தம் - இம்மேருமந்தரரென்கிற முனிவர்களுடைய, மனத்தகத்தை -
மனத்தினிடத்தை, மருவினாள் - சேர்ந்தாள், எ-று.
இங்ஙனங் கூறியதனால், அவர்கள், ஸ்ரீுதஞான
ஸம்பூர்ணர்களாகிக்
கணதர பதவியை யடைந்தார்கள் என்பது பெறப்படும்.
1கட்டிப்புற என்றும் பாடம் 2 சொல்வஞ்சிதான் - என்றும் பாடம்.
(164)
1212. ஒருதிரு மொழியுமே பதினெண்
பாடையாய்
மருவிய தோசனை மிகுதி மண்டலத்
தருகிடை முடிவத னகத்த வர்க்கெலா
மொருவகை யாலினி தாயொ லித்ததே.
(இ-ள்.) ஒரு
திருமொழியுமே
- ஒப்பற்ற
திவ்யத்வனியொன்றே, பதினெண்பாடையாய் -
பதினெட்டு விதமான
பாஷைகளாக, மருவியது - சேர்ந்திராநின்றதாகி, ஓசனை
மிகுதி -
பன்னிரண்டு யோஜனை விஸ்தீர்ணத்தையுடைய,
மண்டலத்து -
ஸமவஸரண மண்டலத்தில், அருகு - பக்கத்திலுள்ளவர்க்கும், இடை
- நடுவிலுள்ளவர்களுக்கும், முடிவு - கடைசியிலுள்ளவர்களுக்கும்,
அதனகத்தவர்க்கெலாம்
- இப்படியாக
அச்
சமவஸரணத்திலிருப்பவர்களுக்கெலாம், ஒருவகையால்
- ஒரே
தன்மையால், (கேட்கும்படியானதாகி), இனி தாய்
- யாவர்களுக்கும்
இனிமையாக, ஒலித்தது - சப்தித்தது, எ-று. (165) 1213. வினவிய பொருளெலாம் விழுங்கி
மெய்த்தவர்
மனம்வலி மொழிவழி வாங்கி
யப்பொரு
டனித்தனி யாகம்நாற் பத்தி
ரண்டதாய்
முனிவறச் செய்துமா முனிவர்க் கோதினார். (இ-ள்.)
மெய்த்தவர் - உண்மையாகிய தபோதனர்களாகிய
இம்மேருமந்தரரென்கிற கணதரர்
பதவியைப் பெற்ற சுருத
கேவலிகளிருவரும், வினவிய -
|