தங்களால் பகவானை பிரசினை
பண்ணப்பட்ட, பொருளெலாம் -
பொருள்களையெல்லாம், மனம் வலி
- மனோபலமென்னும்
ரித்தியதிசயத்தால் சுருத ஞானோதயமாக, விழுங்கி - உட்கொண்டு,
மொழி வழி - (வசனமாக வரும்படியாகச் செய்து) அவ்வசன வழியாக,
அப்பொருள் - அந்த பிரசினையின்
பொருள்களை, வாங்கி -
கிரஹித்து, தனித்தனி - தனித்தனியாக, ஆகம் நாற்பத்திரண்டதாய் -
நாற்பத்திரண்டு பரமாகமங்களாக, முனிவற -
குற்றமற, செய்து -
கிரந்தமாகச் செய்து, மாமுனிவர்க்கு - மஹா முனிவர்கள்
முதலாகிய
கோஷ்டத்திலிருந்து கேட்கப்பட்டவர்களுக்கு,
ஓதினார் - அடியில்
வருமாறு சொல்லினார்கள், எ-று.
‘ஆகமம்? என்பது, ‘ஆகம்? எனத் திரிந்து வந்தது. (166)
1214. முடிவிடை யகலமா யதமொன் றேழ்முழ
விடையினைங் கயிறகன் றேழு
நீளமா
யடியினே ழகன்றுநீண் டுயரமீ ரேழுமாய்
வடிவுடை யுலகமூ வாதஞ் சூழ்ந்ததே.
(இ-ள்.)
 முடிவு - (லோகத்தினுடைய) உச்சியிலேயும், இடை -
மத்திம லோகத்திலேயும், அகலம் - பூர்வாபரவகலமானது, ஒன்று -
ஒரு கயிறாகும், ஆயதம் - தக்ஷிணோத்திரத்தில், (நீளமானது), ஏழ் -
ஏழு கயிறாகும், முழவு - மத்தளம்
போல, இடையின் -
(மத்திமலோகத்துக்கும் லோகாக்கிரத்துக்கும்)
மத்தியில், (அதாவது :
பிரம்மகல்பாந்தியத்தில்), ஐங்கயிறகன்று -
பூர்வாபரம் ஐந்து
கயிறகலமாகி, ஏழு நீளமாய் - ஏழு கயிறு நீளமாகி, அடியின் -
லோகத்தினுடைய அடியிலே, ஏழகன்று - ஏழுகயிறகலமாகி, நீண்டு -
ஏழு கயிறு நீளமாகி, உயரம்
- லோகத்தின் உன்னதமானது,
ஈரேழுமாய் - பதினாலு கயிறு உன்னதமாகி, வடிவுடை -
இந்த
ஸ்வரூபத்தையுடைய, உலகம் - லோகமானது, மூவாதம் - (கனோததி,
கனவாத, தனுவாத மென்கிற) மூன்று வாதங்களால்,
சூழ்ந்தது -
பரிவேஷ்டித்திரா நின்றது, எ-று. (167)
1215. முழஞ்சிலை காவத மேழ்மு டிந்துழி
முழஞ்சிலை காவத மூன்று வீழ்ந்தொர்பா
லெழுந்திவ்வா றெழுகயி றெய்தச்
சென்றிடை
விழுந்தவா றொழிந்ததொன் றாகு மேன்முகம். (இ-ள்.)
முழம் - முழத்தினாலாவது,
சிலை -
வில்லினாலாவது, காவதம் - காதத்தினாலாவது, ஏழ் முடிந்துழி -
ஏழுசென்ற விடத்தில், முழம் - முழமாவது, சிலை - வில்லிலாவது,
காவதம் - காதமாவது, ஓர் பால் - ஒரு பக்கத்துக்கு, மூன்று
வீழ்ந்து
- மூன்று மூன்றாகக் குறைந்து, இவ்வாறு
- இந்தப் பிரகாரமாக,
எழுந்து - (ஏழுகயிறகன்ற லோகத்தினுடைய அடியினின்றும்) எழுந்து,
ஏழுகயி
|