576மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

களில்,  உறை   -  முதலில்  தங்கி யிராநின்ற,  அசுரருக்கு - அசுர
குமாரர்களுக்கு,  ஆயு  -   உத்கிருஷ்டாயுஷ்யமானது, வான்கடல் -
சிறந்த ஒரு  கடற்காலமாகும்,  உவமையில் - உபமையில்லாத, தனு -
(அவர்கள்)  சரீர  உன்னதத்தில்,  தனுவையைந்து  -  இருபத்தைந்து
வில்லு, ஓங்கினார் - உயரமானார்கள், எ-று. (177)

 1225. பல்லமூன் றிரண்டரை யிரண்டு மூவரை
     சொல்லிய நாகர்நற் சுவணர் தீவரோ
     டல்லவ ரறுவர்க்கு மாயு நாகர்க்கு
     வில்லுமூ வைந்துமே லவர்க்கீ ரைந்துமாம்.

   (இ-ள்.) சொல்லிய  -     சொல்லப்பட்ட,    நாகர்   -   நாக
குமாரர்களுக்கு,   பல்ல   மூன்று   -  மூன்று  பல்லமும்,  நல்  -
நன்மையாகிய,  சுவணர்  -  ஸ்வர்ண  குமாரர்களுக்கு, இரண்டரை -
இரண்டரைப்  பல்லமும்,  தீவர்  -  தீப  குமாரர்களுக்கு, இரண்டு -
இரண்டு     பல்லமும்,   அல்லவர்  -   இவர்களல்லாதவர்களாகிய,
அறுவர்க்கும்  -  ஆறு  தரத்தார்களுக்கும்,  மூவரை  -   ஒன்றரை
ஒன்றரைப்  பல்லமும்,  ஆயு  -  உத்கிருஷ்ட  ஆயுஷ்யங்களாகும்,
நாகர்க்கு - நாக  குமாரர்களுக்கு,  வில்லு  மூவைந்து  - பதினைந்து
வில்லு     உன்னதமும்,      மேலவர்க்கு   -     இவர்களல்லாத
எட்டுத்தரத்தார்க்கு,  ஈரைந்து  -  பத்துப் பத்து வில்லு, ஆம் - சரீர
உத்ஸேதங்களாகும், எ-று. (178)

 1226. மானவ ருறைவிடம் மந்த ரத்தினைத்
      தானடு வுடையது தீப சாகர
     மூனமி லிரண்டரை யிரண்டு மாய்ப்புகை
     தானவற் றிடையொன்பத் தைந்து லக்கமாம்.

   (இ-ள்.)  மானவர்  -   மனுஷ்யர்கள்,  உறை - தங்கியிராநின்ற,
இடம்  -  ஸ்தானமானதூ,  மந்தரத்தினைதான் - மந்தர பர்வதத்தை,
நடுவுடையது  -  நடுவேயுடைத்தானதாகி,  ஊனமில் - குற்றமில்லாத,
இரண்டரைத்  தீபம்  -  இரண்டரைத்வீபமும்,  இரண்டு   சாகரம் -
இரண்டு   சமுத்திரமும்,   ஆய்  -  ஆகி,  அவற்றிடை  -  இந்த
இரண்டரைத்வீப இரண்டு ஸமுத்திரங்களின் மத்திய விஸ்தீர்ணமானது,
ஒன்பத்தைந்து   லக்கம்   புகைதான்   -   நாற்பத்தைந்து  லட்சம்
யோஜனைகள்தான், ஆம் - ஆகும், எ-று. (179)

வேறு.

 1227. ஆரியர் மிலேச்ச ராவார் மானவ ரறத்தை யோர்வா
     ராரியர் தரும கண்டம் நூற்றெழு பத்தி னாவார்
     வாரியுட் டீவு தொண்ணூற் றாறுமற் றைக்கண் டத்துஞ்
     சேருந ரறத்தைச் சேரார் மிலேச்சராய்ச் செப்பப் பட்டார்.