(இ-ள்.) பவணர்தாங்கள்
- மானவர்கள் - மனுஷ்யர்கள்,
ஆரியர் - ஆரிய மனுஷ்யர்களென்றும், மிலேச்சர்
- மிலேச்ச
மனுஷ்யர்களென்றும், ஆவார் -
இரண்டு தரமாவார்கள்,
அறத்தையோர்வார் - தருமத்தையறிந்து கைக்
கொள்பவராகிய,
ஆரியர் - ஆரிய மனுஷ்யர்கள், தரும கண்டம் நூற்றெழுபத்தினாவார்
- நூற்றெழுபது தரும கண்டங்களிலே பிறப்பார்கள்,
வாரியுள் -
(மஹாலவணம், காளோதகம், என்னும் இரண்டு)
ஸமுத்திரங்களிலும்
உள்ள, தீவு தொண்ணூற்றாறு
- தொண்ணூற்றாறு
அந்தரத்வீபங்களிலும், மற்றைத் கண்டத்தும் -
மற்றையைந்தைந்து
மிலேச்சகண்டங்களிலும், சேருநர்
- சேர்ந்திரா நின்றவர்கள்,
அறத்தைச் சேரார் - தருமத்தைச்
சேராதவர்கள் (ஆகையால்),
மிலேச்சராய் - மிலேச்ச மனுஷ்யர்களாக, செப்பப்பட்டார் -
பரமாகமத்தில் சொல்லப்பட்டார்கள்,
எ-று. (180)
1228. ஒன்றதாங் காலர் வாலர்
கொம்பர்தாழ் செவியர் சீயம்
பன்றிமான் குரங்கு கீரி யொட்டகங்
கரடி யாதி
ஒன்றலா முகத்தர் பல்ல மாயுகங்
காத மோக்கந்
தின்றிடா பழத்தை மண்ணை முழஞ்சிலும்
மரத்துஞ் சேர்வார்.
(இ-ள்.)
(அந்தரத்வீப வாஸிகளாகிய
மனுஷ்யர்கள்),
ஒன்றதாங்காலர் - ஒருகால் மனுஷ்யர்களாகவும்,
வாலர் - வால்
மனுஷ்யர்களாகவும், கொம்பர் - கொம்பு மனுஷ்யர்களாகவும்,
தாழ்
செவியர் - நீண்டகாதுடையவர்களாகவும், சீயம் - சிம்மமுகமும்,
பன்றி
- பன்றிமுகமும், மான் - மான்முகமும், குரங்கு - வானரமுகமும், கீரி
- கீரிமுகமும், ஒட்டகம் - ஒட்டை முகமும், கரடி - கரடி முகமும்,
ஆதி - முதலாக, ஒன்றலா - மனுஷ்யர்களுக்குப்
பொருந்தாத,
முகத்தர் - முகத்தையுடையவர்களாகவும்,
பல்லமாயுகம் - ஒரு
பல்லமாயுஷ்யத்தையுடையவர்களாகவும்,
காதமோக்கம்
-
இரண்டாயிரம் வில்லுன்னதத்தையுடையவர்களாகவும்,
பழத்தை -
பழங்களையும், மண்ணை - அத்வீபங்களிலுள்ள
தித்திப்பாகிய
மண்ணையும், தின்றிடா - ஆஹாரமாகப் பொசித்து,
முழஞ்சிலும் -
பர்வத குகைகளிலும், மரத்தும் - விருட்சங்களிலும்,
சேர்வார் -
சேர்ந்து வாசம் பண்ணுவார்கள், எ-று. (181)
வேறு.
1229. இமையமா லிமையமும் நிடத நீலியுஞ்
சிமையநல் லுருக்கியுஞ் சிகரி
யாமலை
தமைநடு வுடையவேழ் நாடி வற்றினுட்
சமையமா றுடையவாம் பரத ரேவதம். (இ-ள்.)
இமையம் - ஹிமவான் பர்வதமும், மாலிமையமும் -
மஹாஹிமவான் பர்வதமும், நிடதம் - நிஷதி பர்வதமும், நீலியும் -
நீலிபர்வதமும், சிமை -
|