582மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

மைகளையுடைய,  இரமை  -  ரம்மியாவும், சுரமை - ஸுரம்மியாவும்,
தோமிலா  -  குற்றமில்லாத,  மன்னர்  -  ரர்ஜாக்களினாலே, மன் -
சேர்ந்திராநின்ற,    ரமணியம்  -   ரமணீயாவும்,    மங்கலாவதி  -
மங்கலாவதியுமாகும், எ-று. ஏகாரங்கள் எண்ணுப் பொருளன. (192)

 1240. பரவரும் பதுமைநற் பதுமை மாபதம்
     மருவுமப் பதுமையே பதும காவதி
     திரிவினற் சங்கையே நளினை சீதுதைக்
     கரையதென் குமுதையே சரிதை காண்வரில்.

   (இ-ள்.)    காண்வரில்   -  பார்க்குமிடத்தில்,     சீதுதை   -
சீதோதாநதியினுடைய,   கரையதென்  -  தென்கரையில்  உள்ளவை,
பரவரும் -  சொல்லுதற்கரிய,  பதுமை  -  பத்மாவும்,   நற்பதுமை -
ஸூபத்மாவும்,  மாபதம்   -   மஹாவென்னும்  பதத்தை,  மருவும் -
சேர்ந்திராநின்ற, அப்பதுமை - அந்தப் பதுமையும் (அதாவது : மஹா
பத்மாவும்), பதுமகாவதி - பத்மாகாவதியும், திரிவில் - கெடுதலில்லாத,
நல் - நன்மையாகிய,  சங்கை -  சங்காவும்,  நளினை  - சங்காவும்,
நளினை  -  நளினாவும்,   குமுதை   -   குமுதாவும்,    சரிதை -
ஸரிதாவுமாகும், எ-று. (193)

 1241. வடதடத் தின்வப்பை நல்ல வப்பையு
     மிடரிலா மாவப்பை வப்ப காவதி
     சுடருடைக் கந்தையே சுகந்தை தோமிலாக்
     கடலுடைக் கந்திலை கந்த மாலினி.

   (இ-ள்.)     வடதடத்தின்   -     ஸீதோதா    நதியினுடைய
வடகரையில், வப்பை - வப்ராவும், நல்ல வப்பையும் - ஸுவப்ராவும்,
இடரிலா   -    துன்பமில்லாத  -  மாவப்பை  -   மஹாவப்ராவும்,
வப்பகாவதி  -  வப்ரகாவதியும்,   சுடருடை - பிரகாசம் பொருந்திய,
கந்தை   -   கந்தாவும்,  சுகந்தை  -  ஸுகந்தாவும்,    தோமிலா -
குற்றமில்லாத,  கடல்  -  ஸமுத்திரத்தை,  உடை  -  உடைத்தாகிய,
கந்திலை -   கந்திலாவும், கந்தமாலினி - கந்தமாலினியுமாகும், எ-று. (194)

வேறு.

 1242. நாலுமுன் னதியினும் நாலுநால் வரையினும்
      நாலுநா லிரட்டியாய் விதேகநாடு நின்றவே.

    (இ-ள்.) நாலுமுன்னதியினும் -  நால்மூன்று   பன்னிரண்டாகிய
விபங்கநதிகளாலும்,    நாலுநால்   வரையினும்   -     நால்நான்கு
பதினாறாகிய வக்ஷாரபர்வதங்