584மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

 1247. ஒன்றினொன் றிரட்டியாய்ச் சென்றதீபஞ் சாகரம்
      மன்றன மலைப்புறத்து நின்றவா றியம்புவாம்.

    (இ-ள்.)      ஒன்றினொன்றிரட்டியாய்   -   ஒன்றுக்கொன்று
இரட்டித்த    இரட்டித்த     விஸ்தீர்ணமுடையனவாகி,    சென்ற -
ஒன்றையொன்று      சூழ்ந்து      அடைந்திராநின்ற,      தீபம் -
அஸங்கியாதத்வீபங்களும்,  சாகரம் - அஸங்கியாத ஸமுத்திரங்களும்,
மன்றனமலை -  மானுஷோத்தர பர்வத்தின், புறத்து - பாஹ்யத்திலே,
நின்றவாறு   -   இராநின்ற   விதத்தை,   இயம்புவாம்  -   இனிச்
சொல்லுவோம், எ-று.

 1248. இருபத்தைந்து கோடாகோடி யாமுத்தார பல்லங்கட்
      குரியரோம மெண்ணவாந் தெரியுந்தீபஞ் சாகரம்.

     (இ-ள்.)     தெரியும்    -    விளங்குகின்ற,      தீபம்  -
அஸங்கியாதத்வீபங்களும்,  சாகரம்  - அஸங்கியாத சமுத்திரங்களும்,
(எவ்வளவென்று கேட்டால்),  இருபத்தைந்து  கோடா  கோடியாம் -
இருபத்தைந்து  கோடாகோடியாகிய, உத்தார பல்லங்கட்கு - உத்தார
பல்லங்களுக்கு,  உரிய  -  உரித்தாகிய,   ரோமம்  -   மயிர்களின்,
எண்ணவாம் - எண்ணிக்கையையுடையனவாம், எ-று (201)

 1249. உவரிதண்ணீர் தேன்சுரைத் திவருபானெ யிக்குவின்
      சுவையநீரின் வாரிக ளவையுமேழ தாகுமே.

    (இ-ள்.) உவரி -  உப்புஜலத்தையுடைய ஸமுத்திரமும், தண்ணீர்
-  சுத்தஜலத்தையுடைய   ஸமுத்திரமும்,   தேன்   -    மதுபோல
ஜலத்தையுடைய ஸமுத்திரமும், சுரைத்து - கள்ளுப்போன்ற ஜலமுள்ள
ஸமுத்திரமும்,  இவரு  -  விரும்புகின்ற, பால் - பால் ஸமுத்திரமும்,
நெய் - நெய் ஸமுத்திரமும், இக்கு - இட்சுரஸஸமுத்திரமும், (ஆகிய)
ஏழது -  ஏழும், ஆகும் -  ஏழுவிதமாகிய  ஜலஸ்வாதுக்களையுடைய
ஸமுத்திரங்களாகும்,   வாரிகளவையும்   -   மற்ற    அஸங்கியாத
ஸமுத்திரங்களெல்லாம்,   நீரின்   இன்சுவைய   -   இட்சுரஸமாகிற
ஜலஸ்வாதுவையுடைய ஸமுத்திரங்களாகும், எ-று. (202)

 1250. சாகரஞ் சலசரங்கட் காகரங்க ளல்லவாம்
      நாகமாதி பாதநால் போகபூமி தீவெலாம்.

   (இ-ள்.)   சுல்லைமேரு  -   க்ஷுல்லக  சாகரம் - அஸங்கியாத
ஸமுத்திரங்களும்,  சலசரங்கட்கு - ஜலசர ஜீவன்களுக்கு, ஆகரங்கள்
- இருப்பிடங்கள்,  அல்லவாம்  -  அல்லாதவனவாகும், தீவெலாம் -
அஸங்கியாதத்வீபமெல்லாம்,   நாகமாதி   -   யானை   முதலாகிய,
பாதநால்  -  சதுஷ்பாதங்களையுடைய  ஜீவன்களிருக்கும்  படியான,
போகபூமி - திரியக்போக பூமிகளாகும், எ-று. (203)