608மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
  

இங்கு வந்து - இந்தப் பூமியில் வந்து தீர்த்தங்கரர்களாகி, இமையவர்
- தேவர்கள்  செயும்  -  செய்கின்ற, சிறப்பைந்தும் - பஞ்சகல்யாண
பூஜைகளையும்,   எய்தி -  அடைந்து,  போய்  -  ஸகல கர்மக்ஷயம்
செய்து போய்,  இமையவர்   தொழ  -   தேவர்கள்  வணங்கும்படி,
சித்தியகத்தும் - மோட்சமென்கிற ஸித்தி க்ஷேத்திரத்தில்,  இருப்பர் -
ஸ்வயம்புவாக வீற்றிருப்பார்கள், எ-று. (260)

  1308. எண்வகை வியந்தரர்க் கிடமி தாகவும்
      பண்ணவர் பணித்தனர் பல்ல மாயுக
      முன்னிலத் தெங்கணு முறைவ ரோக்கமும்
      பண்ணுறு சிலைகள்பத் தாகு மென்பவே.

    (இ-ள்.)      எண்வகை - எட்டுப்பிரகாரமாகிய,  வியந்தார்க்கு
- வியந்தர தேவர்களுக்கு, இடம் - ஸ்தானமானது, இதாகவும் - இந்த
மத்தியமலோகமேயாகவும்,   பண்ணவர் - ஸர்வஜ்ஞர், பணித்தனர் -
சொன்னார்,  (மேலும்     இவர்கள்),     பல்லமாயுகம்   -    ஒரு
பல்லமாயுஷ்யத்தில்,   முன்னிலத்து  -  முன்னாலே  சொல்லப்பட்ட
அஸங்கியாதத்வீப சமுத்திரங்களில், எங்கணும்  -  எவ்விடங்களிலும்,
உறைவர் - தங்கியிரா நின்றவர்களாவார்கள், (இவர்கட்கு), ஓக்கமும் -
உன்னதமும், பண்ணுறு - பண்ணிட்டிரானின்ற,  சிலைகள் - விற்கள்,
பத்தாகும் - பத்தாம், என்ப - என்றும் சொல்லுவர், எ-று. (261)

 1309. ஆயிரம் யோசனை யாழ்ந்த தோங்கிய
      தாயிர மிலாதநூ றாயி ரம்புகை
      யாயிரம் பத்தடி யகல மாயது
      மேயநால் வனத்தது மேரு வென்பவே.

     (இ-ள்.)    மேருவென்ப  -    மஹம்மேரு    பர்வதமென்று
சொல்லப்படுவது, ஆயிரம்   யோசனை   - ஆயிரம்   யோஜனைப்
பிரமாணம், ஆழ்ந்தது - பூமிக்குள்  ஆழ்ந்ததாகும்,  ஆயிரமிலாத -
ஆயிரங்குறைந்த, நூறாயிரம்புகை - நூறாயிரம் யோஜனை, (அதாவது
: தொண்ணூற்றொன்பதினாயிரம் யோஜனை), ஓங்கியது - பூமிக்குமேல்
உன்னதத்தையுடையதாகும்,  அடி  -  அடியில்,  ஆயிரம்   பத்து -
பதினாயிரம் யோஜனை, அகலமாயது -  அகலமுள்ளதாகும்,  மேய -
பொருந்திய, நால்வனத்தது -  (பத்திராஸால,  நந்தன,   ஸௌமனஸ,
பாண்டுகமென்னும்) நாலுவனங்களை யுடையதாகும், எ-று. (262)

 1310. துகணில மீதுபத் திலாதவெண் ணூறுநற்
      புகைமிசை நூற்றொரு பத்து வான்புகை
      யிகழ்விலாச் சோதிட ரொருக யிற்றெல்லை
      யகணிலத் தியங்குவர் புறத்து நிற்பரே.