தாமமுஞ் சாந்து மேந்தித் தாம்பணிந்
தெழுந்து நின்று
காமனைக் கடந்த கோமான் கழலடி பரவ லுற்றார்.
(இ-ள்.) மிடைந்த
- அவரிடத்தில் வந்து சேர்ந்த, தேவர் -
அத்தேவர்கள், தேம் - வாசனைபொருந்திய,
மலர்மாரி -
புஷ்பவருஷத்தையும், சுண்ணம் - கந்தப் பொடியையும், சிதறினர்
-
சொரிந்தார்கள், திசைகள் - எத்திக்குகளிலும், முட்ட -
(வாசனை)
வியாபிக்கும்படியாக, தூமமும் - அகில்தூப
முதலானவைகளும்,
எழுந்த - உண்டாய்ப் பரவின, தீபம் - (இரத்ன)
தீபமுதலாயினவும்,
சுடர்ந்தன - பிரகாசித்தன, (பின்னும்) தாம் - அத்தேவர்கள்
தாம்,
தாமமும் - மாலைகளையும், சாந்தும் - சந்தன
முதலானவைகளையும்,
ஏந்தி - சர்வக்ஞனுக்கு அர்ச்சனையாகத் தரித்து, பணிந்து -
வணங்கி,
எழுந்துநின்று -எதிரில் எழுந்துநின்று, காமனை - மன்மதனை,
கடந்த
- ஜெயித்த, கோமான் - அந்த இறைவரது, கழலடி -
முன்பு
வீரகண்டை யணிந்திருந்த பாதத்தை, பரவலுற்றார் -
ஸ்துதிக்கத்
தொடங்கினார்கள், எ-று.
கழலடி - என்பது, பூர்வாபேக்ஷையைப்பற்றிச்
சொல்லப்பட்டது,
பூர்வாபேக்ஷை முன் அரசனாயிருந்த நிலைமை.
(127)
வேறு.
128. உவத்தல் காய்தலா லுன்றிரு வடித்தலத் தெழுந்தோர்க்
குவத்தல் காய்தலுன் றிருவுளத் தொன்றுநீ
யிலையேற்
சுவர்க்க மாநர கத்தவர் துன்னுவ
துனது
தவத்தின் றன்மையோ தம்வினைத்
தன்மையோ வருளே.
(இ-ள்.) உவத்தல் -
சந்தோஷித்தலாலும், காய்தலால்,
கோபித்தலாலும், உன் - உன்னுடைய, திருவடித்தலத்து
- அழகிய
பாததலத்து, எழுந்தோர்க்கு - வந்தடைந்தவர்களுக்கு,
நீ-, உன் -
உன்னுடைய, திரு - அழகிய, உளத்து -
மனதில், உவத்தல் -
சந்தோஷிப்பதும், காய்தல் - கோபித்தலும்,ஒன்றிலை -
பொருந்திலை,
இலையேல் - ( அங்ஙனம் உன்னிடத்தில்
அக்குணங்கள்)
இல்லையானால், அவர் - அவ்விருதிறத்தவர்களில்,
சுவர்க்கம் -
(உன்மேல் அனுராகித்தவர், அதாவது :
சந்தோஷித்தவர்)
சுவர்க்கத்தையும், மாநரகத்து - (உன்மேல் த்வேஷித்தவர்,
அதாவது
கோபித்தவர்) பெரிய துக்கத்தையுடைய நரகத்தையும்,
துன்னுவது -
அடைவது, உனது - உன்னுடைய,தவத்தின்றன்மையோ -
தபஸினது
குணமோ? தம்வினைத் தன்மையோ - அவர்களுடைய
வினையினது
குணமோ? அருள் - எங்களுக்குத் தெரியும்படி
கூறியருள்வாயாக,
எ-று.
(128) 129. இறந்த காதிக
ணான்மையு மழிந்தவக் கணத்தே
நிறைந்த நான்மையும் வானவர் நிலையுடன் றளராப்
|