ஜோதிஷ்கராகிய) மூவகை தேவர்களுக்கும்,
கீழவாயுகம் -
ஜகன்னியாயுஷ்யமானது, ஈராயிரங்கள்
அஞ்சு - பதினாயிரம்
வருஷங்களாகும், எ-று. (265)
1313. இரண்டு நான்குமுன் னான்குமே ழாறுமற்
றிரண்டினோ டெழுபதா மிந்து வருக்கனுந்
திரண்ட நூற்றுமுப் பத்திரண் டுஞ்செலு
மிரண்டி ரண்டரைச் சாகரத் தீவினே.
(இ-ள்.)
இரண்டிரண்டரைச்
சாகரத் தீவின் -
மத்தியமலோக மத்திய பூமியாகிய இரண்டரைத்வீபம்
இரண்டு
ஸமுத்திரங்களிலும், இந்து - சந்திரனும்,
அருக்கனும் - ஸூர்யனும்,
இரண்டு - (ஜம்பூத்வீபத்தில்) இரண்டு சந்திரர் இரண்டு ஸூர்யர்களும்,
நான்கு - (மஹா லவண ஸமுத்திரத்தில்) நான்கு
சந்திரர் நான்கு
ஸூர்யர்களும், முன்னான்கு - (தாதகீஷண்டத்வீபத்தில்)
பனிரண்டு
சந்திரர் பனிரண்டு ஸூர்யர்களும்,
ஏழாறு - (காளோதக
ஸமுத்திரத்தில்)
நாற்பத்திரண்டு
ஸூர்யர்களும்,
இரண்டினோடெழுபதாம் -(புஷ்க்கரார்த்தத்வீபத்தில்)
எழுபத்திரண்டு
சந்திரர் எழுபத்திரண்டு
ஸூர்யர்களும், (ஆசி)
திரண்ட -
சேர்க்கப்பட்ட, நூற்றுமுப்பத்திரண்டும்
- இந்த நூற்று
முப்பத்திரண்டு ஸூர்ய
சந்திரர்களும்,
செலும் -
கமனத்தையுடையவர்களா யிராநின்றார்கள், எ - று (266)
வேறு.
1314. துறக்கத்தி னியற்கை சொல்லிற் சொல்லிய படலந் தோறு
மிறப்பவிந் திரகஞ் சேணி பந்தங்கிண் ணகமு மாகுந்
திறத்துளி சேணி பந்த மிருதுநாற் றிசையுஞ் சென்ற
வறக்கதி ராழி வேந்த னறுபதோ டிரண்டென் றானே.
(இ-ள்.)
துறக்கத்தின் - ஸ்வர்க்க
லோகத்தினுடைய,
இயற்கை - ஸ்வரூபத்தை, சொல்லில் - சொல்லுமிடத்தில், சொல்லிய
- சொல்லப்பட்டிருக்கிற, படலந்தோறும் -
படலங்கள் படலங்கள்
தோறும், இறப்ப - மிகவும், இந்திரகம் - இந்திரகங்களும்,
சேணி
பந்தம் - ஸ்ரீணிபந்தங்களும்,
கிண்ணகமும் - புஷ்ப்ப
பிரகீர்ணங்களும், (என) ஆகும் - (இப்படி
மூன்று விதமான
விமானங்கள்) ஆகும், திறத்துளி - வரிசையை
உள்ளிட்டிராநின்ற,
சேணி பந்தம் - ஸ்ரீணிபந்தங்களானவை, இருது - (ஸௌதர்ம
கல்ப்பத்தில்) இருது விமானத்தினுடைய,
நாற்றிசையும் - நாலு
திக்குகளிலேயும் சென்ற - வரிசையாக இராநின்ற சங்கியையானது,
அறக்கதிராழி வேந்தன் - தர்ம
சக்கரத்தையுடைய அரஹந்த
பரமதேவன், அறுபதோடிரண்டு - அறுபத்திரண்டு பேஸ்ரீணிபந்தமாகும், என்றான் - என்று சொன்னான், (அதாவது தெரிவித்தான்), எ-று. (267)
|