612மேருமந்தர புராணம்  


 

 1317. நூற்றினோ டொருபத் தொன்றா மேட்டிம திரயத் தின்க
      ணூற்றினோ டேழு மாகு மத்திம மும்மை யிற்றொண்
      ணூற்றினோ டொன்று மாகு முபரிம மும்மை யின்கண்
      ணாற்றவு மொன்ப தைந்தா மணுதிசா ணுத்த ரத்தே.

     (இ-ள்.)   ஏட்டிமதிரயத்தின்கண்   -   ஹேஷ்டிமத்திரயத்தில்,
நூற்றினோடொருபத்  தொன்றாம்  - நூற்றுப்பதினோரு விமானமாகும்,
மத்திம   மும்மையில்   -   மத்திமத்திரயத்தில், நூற்றினோடேழும் -
நூற்றியேழு விமானங்களும், ஆகும் - ஆம், உபரிம  மும்மையின்கண்
- உபரிமத்திரயத்தில்,               தொண்ணூற்றினோடொன்றும் -
தொண்ணூற்றொரு    விமானங்களும்,  ஆகும் - ஆம்,  ஆற்றவும் -
மிகவும் மேலான தன்மையுள்ள, அணுதிசா - நவாணுதிசையில், ஒன்பது
விமானங்களும்,    அணுத்தரத்து   -    பஞ்சாணுத்தரத்தில், ஐந்து -
ஐந்தேவிமானங்களும், ஆம் - ஆகும், எ-று.                 (270)

 1318. இந்திரர் சாமா னீகர் தாயத்திங் கர்பா ரிடதர்
      கந்தபா லர்காப்ப ரா னீகர்கீ ணர்கில் விழியர்
      விந்திரா திகளிற் பத்து மரசர்கள் குரவ ரன்றி
      மந்திரர் சூழ்ந்தி ருப்பர் காஞ்சுகி யாதி போல்வார்.

     (இ-ள்.)   இந்திரர் - இந்திரர்களும்,    சாமானீகர் - ஸாமானீக
தேவர்களும்,    தாயத்திங்கர் - த்ராயத்ரிம்ச தேவர்களும், பாரிடதர் -
பிரதீந்திரர்களும்,    கந்தபாலர் - லோகபால தேவர்களும், காப்பர் -
தண்டநாயகர்களும்,    ஆனீகர் - ஆனிக     தேவர்களும், கீணர் -
ப்ரகீர்ணக தேவர்களும்,   கில்விழியர்  -  கில்விழிகர்களும், (ஆகிய)
இந்திராதிகளில்   -   இந்திரர்   முதலானவர்களில், பத்தும் - இந்தப்
பத்துத் தரங்களும், அரசர்கள் - பூமியிலிராநின்ற ராஜாக்களும், குரவர்
- பெரியோர்களும்,   அன்றி   -    அல்லாமலும், மந்திரர் - மந்திரி
முதலானவர்களும்,   சூழ்ந்திருப்பார்  - கூடியிருப்பார்கள், (இவர்கள்)
காஞ்சுகியாதிபோல்வார்   -  மேற்சட்டை முதலியவை போல்வார்கள்,
எ-று.                                                 (271)

 1319. நடுவணென் புகைக்கொ ழுப்பாய் நந்தியீச் சிறகொத் தீற்றிற்
     குடைமலர்ந் திருந்த தேபோன் றிரண்டரைத் தீவோ டொத்துக்
     கடையிலா வறிவு காட்சி யுடையவர் கழுமி நின்ற
     விடமது வுலகத் துச்சி யேத்தருந் திறத்த தாமே.

     (இ-ள்.)  கடையிலா - அனந்தமாகிய,  அறிவு - ஞானத்தையும்,
காட்சி  -    தர்சனத்தையும்,   உடையவர் - உடைத்தானவர்களாகிய
சித்தபரமேஷ்டிகள்,   கழுமி நின்ற - பொருந்தி யிராநின்ற, இடமது -
ஸித்திக்ஷேத்திரமென்னும் இடமானது,